/* */

சிறுமி பலாத்கார வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்தவர் வெட்டிக்கொலை

செய்யாறு அருகே சிறுமி பலாத்கார வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்த தனியார் பஸ் டிரைவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

சிறுமி பலாத்கார வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்தவர் வெட்டிக்கொலை
X

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா பாண்டியம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் (வயது 33), தனியார் பஸ் டிரைவர். இவருக்கு மனைவி மற்றும் 3 மகன்கள் உள்ளனர். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு முருகன் தனது உறவினரின் மகளான 16 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து சிறுமியின் பெற்றோர் செய்யாறு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து முருகனை கைது செய்து சிறையில் அடைத்தனர். கடந்த 23-ந் தேதி முருகன் ஜாமீனில் வெளியில் வந்தார்.

இந்த நிலையில் இன்று காலை 7 மணி அளவில் முருகன் தனது வீட்டின் பின்புறம் உள்ள தைல தோப்புக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு பதுங்கியிருந்த பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமியின் தந்தை, அவரது சகோதரர் மற்றும் உறவினர் ஒருவர் சேர்ந்து முருகனை கத்தியால் சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது.

முருகனின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். இதை பார்த்த 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய முருகனை பொதுமக்கள் மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முருகன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் தூசி போலீசார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான 3 பேரையும் தேடி வருகின்றனர்.

Updated On: 30 Jun 2022 1:55 PM GMT

Related News

Latest News

  1. கலசப்பாக்கம்
    மிருகண்டா அணையின் நீர்மட்டம் உயர வாய்ப்பு
  2. திருவண்ணாமலை
    திடீர் மழையால் குளிர்ந்த அக்னி ஸ்தலம், மக்கள் மகிழ்ச்சி
  3. வந்தவாசி
    சித்திரை மாத கிருத்திகை: வந்தவாசி அருகே 108 பால்குட ஊா்வலம்
  4. குமாரபாளையம்
    குமாரபாளையம் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  5. வீடியோ
    தீவிரவாதிகள் விவகாரத்தில் மீண்டும் அம்பலப்பட்ட Congress ! வைரலாகும்...
  6. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  7. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  8. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  9. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  10. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!