/* */

செய்யாறு அருகே கல்குவாரி லாரியை சிறைபிடித்த கிராம மக்கள்

செய்யாறு அருகே கல் குவாரி லாரியை பொதுமக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

HIGHLIGHTS

செய்யாறு அருகே  கல்குவாரி லாரியை சிறைபிடித்த கிராம மக்கள்
X

லாரியினை சிறைபிடித்த பொதுமக்கள்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா சிறுவேளியநல்லூர் கிராமத்தில் கல்குவாரி அமைந்துள்ளது. இங்கிருந்து அரசு அறிவித்துள்ள விதிமுறைகளை மீறி அதிக பாரங்களுடன் கருங்கற்களை இரவு பகல் பாராமல் லாரியில் ஏற்றுக்கொண்டு அதி வேகமாக செல்கின்றனர். அதி வேகமாக செல்லும் பாரம் ஏற்றி செல்லும் லாரிகளால் பொதுமக்கள் பெரிதும் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.

மேலும் கல்குவாரி அமைந்துள்ள புளியரம்பாக்கம் உள்பட கிராமப்புற சாலைகள் அனைத்தும் பழுதடைந்து குண்டும் குழியுமாக உள்ளன. இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும் எந்த விதமான நடவடிக்கையும் மாவட்ட நிர்வாகம் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

இந்நிலையில் அந்த வழியாக கல் குவாரியிலிருந்து அதிக பாரம் ஏற்றிச் சென்ற லாரியினை கிராம பொதுமக்கள் மடக்கி சிறை பிடித்தனர். சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக சிறைபிடித்த லாரியினை விடுவிக்காமல் கிராம மக்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கல்குவாரி மேற்பார்வையாளர் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் அங்கு வந்த காவல்துறையினரும் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது இந்த சாலை வழியாக லாரிகள் வரக்கூடாது. குண்டும் குழியுமான சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் தங்கள் கோரிக்கையை கூறினர்.

இதனை ஏற்றுக்கொண்ட கல்குவாரி மேற்பார்வையாளர் மற்றும் காவல்துறையினர் உடனடியாக சரி செய்து தரப்படும் எனக் கூறினர். இதை எடுத்து கிராம மக்கள் லாரியினை விடுவித்தனர். இதனால் போக்குவரத்து சுமார் 4 மணி நேரம் பாதிக்கப்பட்டது.

Updated On: 6 July 2023 2:28 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்