செய்யாறு அருகே ஆதரவற்ற பெண்களுக்கு விலையில்லா ஆடுகள்

செய்யாறு அருகே ஆதரவற்ற பெண்களுக்கு விலையில்லா ஆடுகள்
X

ஆதரவற்ற பெண்களுக்கு விலையில்லா ஆடுகள் சட்டமன்ற உறுப்பினர் வழங்கினார்.

செய்யாறு அருகே ஆதரவற்ற பெண்களுக்கு விலையில்லா ஆடுகள் சட்டமன்ற உறுப்பினர் வழங்கினார்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம் கொருக்கை கிராமத்தில் விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட ஆதரவற்ற பெண்கள் என 50 பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகள் வழங்கப்பட்டன.

கால்நடை துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கால்நடைத்துறை இணை இயக்குனர் சோமசுந்தரம் தலைமை வகித்தார்.

மாவட்ட ஊராட்சி தலைவர் பார்வதி சீனிவாசன் முன்னிலை வகித்தார். செய்யாறு ஒன்றியக்குழு தலைவர் பாபு வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஜோதி பங்கேற்று பயனாளிகளுக்கு ஆடுகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் வட்டார கால்நடை மருத்துவர் வெங்கட்ராமன் , மருத்துவர்கள் , ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய செயலாளர்கள், செவிலியர்கள், மருத்துவத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story