/* */

செய்யாறு அருகே வரதட்சணை கேட்டு மனைவியை சித்ரவதை செய்த ஆசிரியர் கைது

செய்யாறு அருகே வரதட்சணை கேட்டு மனைவியை சித்ரவதை செய்த ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

செய்யாறு அருகே வரதட்சணை கேட்டு மனைவியை சித்ரவதை செய்த ஆசிரியர் கைது
X

பைல் படம்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தாலுகா தவசி கிராமத்தை சேர்ந்தவர் நாராயணமூர்த்தி (வயது 34), புரிசை அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

இவருக்கும், விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகா பொன்பத்தி கிராமத்தை சேர்ந்த சரவணபிரியா (26) என்பவருக்கும் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

திருமணமான சில நாட்களிலே நாராயணமூர்த்தி, அவரது தாயார் கமலா, சகோதரி உமாமகேஸ்வரி, அவரது கணவர் சங்கர் ஆகியோர் வரதட்சணை கேட்டு சரவணபிரியாவை கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதனால் பலமுறை உறவினர்கள் சமாதானம் செய்து வைத்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் கடந்த 19-ந்தேதி இரவு கணவன்-மனைவிக்கு இடையே மீண்டும் வரதட்சணை தொடர்பாக தகராறு ஏற்பட்டதாகவும், அப்போது அவர்கள் 4 பேரும் சேர்ந்து சரவணபிரியாவை ஆபாசமாக பேசி அடித்து துன்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து சரவணபிரியா செய்யாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தினி தேவி (பொறுப்பு) வழக்குப்பதிவு செய்து ஆசிரியர் நாராயணமூர்த்தியை கைது செய்தார்.

மேலும் தலைமறைவாக உள்ள கமலா, உமாமகேஸ்வரி, சங்கர் ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Updated On: 21 Jan 2022 6:56 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?