/* */

மனைவி, பிள்ளைகள் கண் எதிரே ஏரி நீரில் அடித்துச்செல்லப்பட்ட மாற்றுத்திறனாளி

மனைவி, பிள்ளைகள் கண் எதிரே ஏரி நீரில் அடித்துச்செல்லப்பட்ட மாற்றுத்திறனாளியை தேடும் பணி இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது

HIGHLIGHTS

மனைவி, பிள்ளைகள் கண் எதிரே ஏரி நீரில் அடித்துச்செல்லப்பட்ட மாற்றுத்திறனாளி
X

காஞ்சீபுரம் பிள்ளையார்பாளையம் சி.எஸ்.எம் தெருவை சேர்ந்த வீராசாமி மகன் முத்து (வயது 55). மாற்றுத்திறனாளியான இவர் பட்டு நெசவு தொழிலாளி. தொடர்மழையால் தற்போது வெம்பாக்கம் மாமண்டூர் ஏரி நிரம்பி உபரிநீர் வெளியேறி வருகிறது.

இந்த நிலையில் நேற்று பிற்பகல் 5.30 மணியளவில் தனது மனைவி, 2 மகன்கள், 2 மகள்களுடன் உபரிநீர் வெளியேறும் கலங்கல் அருகே நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்.

அப்போது அனைவரும் ஏரியில் குளிக்க விரும்பியுள்ளனர். முத்து இறங்கியபோது அவர் கால் தவறி விழுந்து விட்டார். உபரிநீர் வேகமாக வெளியேறிக்கொண்டிருந்ததால் அதில் அவர் தண்ணீரில்அடித்துச் செல்லப்பட்டார்.

தகவல் அறிந்த செய்யாறு தீயணைப்பு துறையினர் தேடும் பணியில் ஈடுபட்டனர். மாலை 6 மணி வரையில் தேடிவந்த நிலையில் போதிய வெளிச்சம் இல்லாததால் தேடும் பணி நிறுத்தப்பட்டது. இன்று காலை தேடும் பணியை தொடங்குவதாக மீட்புக்குழுவினர் தெரிவித்தனர். இந்நிலையில் இன்று காலை முதல் தேடும் பணி நடைபெற்று வருகிறது

Updated On: 1 Dec 2021 6:39 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!