செய்யாறு வட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

செய்யாறு வட்டத்தில் கோவிட் 19 தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டம் அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் கோவிட் 19 தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் மாவட்ட வளர்ச்சிப்பணிகள் குறித்து துறை அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சித் தலைவர் பா முருகேஷ் ஆய்வு கூட்டம் நடத்தினார். இந்தக் கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர், திட்ட இயக்குனர், மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பின்பு அனக்காவூர் தொகுதி மேம்பாட்டு அலுவலகத்தில் கோவிட் -19 நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சி திட்ட பணிகள் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டம் முடிவடைந்தததும் ஆட்சியர் மற்றும் அலுவலர்கள் அலுவலக வளாகத்தில் மரம் நட்டனர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu