செய்யாறு பகுதிகளில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்

செய்யாறு பகுதிகளில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்
X
செய்யாறு நகராட்சி பகுதிகளில் கலைநிகழ்ச்சியின் மூலம் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு நகராட்சி பகுதிகளில் கொரோனா வைரஸ் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் நகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது. முககவசம் அணிதல், கை கழுவுதல், சமூக இடைவெளி, குறித்த விழிப்புணர்வு பிரசுரங்களை பொதுமக்களுக்கு விநியோகித்தார்.

மேலும், கொரோனா விழிப்புணர்வு நாடகம், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிகழ்வில் வட்டார மருத்துவ அலுவலர்கள், செவிலியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai in future agriculture