/* */

திருவத்திபுரம் நகராட்சியில் தூய்மைப் பணி ஆலோசனை கூட்டம்

திருவத்திபுரம் நகராட்சியில் தூய்மை பணி மேற்கொள்ளுதல் குறித்து ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

Thiruvannamalai News
X

திருவத்திபுரம் நகராட்சியில் தூய்மை பணி மேற்கொள்ளுதல் குறித்து ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம் திருவத்திபுரம் நகராட்சியில் தூய்மைப் பணி மேற்கொள்ளுதல் குறித்து ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு நகராட்சி ஆணையர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார். துப்புரவு ஆய்வாளர் மகராசன் வரவேற்றார். நகரமன்றத் தலைவர் மோகனவேல், தலைமை வகித்தார்.

நிகழ்ச்சியில் திருவத்திபுரம் நகராட்சியில் உள்ள 27 வார்டுகள், பேருந்து நிலையம், காந்தி சிலை ஆகிய பகுதிகளில் ஒட்டுமொத்த துப்புறவு மேற்கொள்ளுதல், திடக்கழிவுகளை தரம் பிரித்தல், வீட்டுக் கழிவுகளை உரமாக்குதல், குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருட்களை பயன்படுத்தாமல் இருப்பது குறித்து பொதுமக்கள், வணிகர்களுக்கு ஆலோசனை வழங்குதல், நகராட்சி பகுதியில் தேவையற்ற வகையில் உள்ள விளம்பர பதாகைகள் மற்றும் முக்கிய இடங்களில் உள்ள சுவரொட்டிகளை முழுமையாக அகற்றுதல், நகரப் பகுதியில் ஒட்டப்பட்டுள்ள கட்டட கட்டுமான கழிவுகளை அப்புறப்படுத்துதல், நீர்நிலைகள் அதனை சுற்றியுள்ள திட்ட கழிவுகளை அகற்றுதல் மரங்கள் நடுதல் உள்ளிட்ட பல்வேறு கருத்துக்கள் கூட்டத்தின்போது தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில் நகரமன்ற உறுப்பினர்கள் வியாபாரிகள் பல்வேறு தொண்டு நிறுவனங்களை சேர்ந்த நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 8 Jun 2022 6:37 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது