/* */

கணக்குகளை ஆய்வுக்கு சமர்ப்பிக்காத ஊராட்சி தலைவர் மீது நடவடிக்கை

கணக்குகளை ஆய்வுக்கு சமர்ப்பிக்காத மேல்மா ஊராட்சி தலைவர் திருவண்ணாமலை கலெக்டர் நடவடிக்கை

HIGHLIGHTS

கணக்குகளை ஆய்வுக்கு சமர்ப்பிக்காத ஊராட்சி தலைவர் மீது   நடவடிக்கை
X

திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ்

ஊராட்சி கணக்குகளை ஆய்வுக்கு சமர்ப்பிக்காத ஊராட்சி செயலாளரை சஸ்பெண்ட் செய்தும், ஊராட்சி தலைவரின் காசோலை அதிகாரத்தை பறித்தும், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் உத்தரவிட்டுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த மேல்மா ஊராட்சி தலைவராக சோபனா என்பவரும் ஊராட்சி செயலாளர் புஷ்பலதா என்பவரும் இருந்தனர். இந்த ஊராட்சியில் கூடுதல் ஆட்சியர் பிரதாப் கடந்த சில நாட்களுக்கு முன் களஆய்வு செய்தபோது, ஊராட்சி கணக்குகளை ஆய்வுக்கு சமர்ப்பிக்காததாலும், ஆய்வின்போது, ஊராட்சி தலைவர் ஊரில் இல்லாததாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கூடுதல் ஆட்சியர் பிரதாப், மாவட்ட ஆட்சியர் முருகேஷூக்கு பரிந்துரைத்தார்.

இதையேற்று, ஊராட்சி தலைவரின் காசோலை அதிகாரம் பறிக்கப்பட்டு, அந்த அதிகாரத்தை அனக்காவூர் கிழக்கு யூனியன் பி.டி.ஓ.,வுக்கு வழங்கியும், ஊராட்சி செயலாளரை சஸ்பெண்ட் செய்தும், மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

Updated On: 17 Oct 2021 1:32 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  2. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  3. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  4. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  5. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  6. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  7. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  8. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  9. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  10. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்