/* */

செய்யாறு அருகே மரத்தில் கார் மோதி விவசாயி பலி

செய்யாறு அருகே டயர் வெடித்ததால், கார் மரத்தில் மோதி விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

HIGHLIGHTS

செய்யாறு அருகே மரத்தில் கார் மோதி விவசாயி பலி
X

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா குத்தனூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜகோபாலன். இவர் தனது உறவினர்களுடன் நாவல் பாக்கம் கிராமத்தில் நடந்த உறவினரின் நிச்சயத்தார்த்த நிகழ்ச்சியில் பங்கேற்க ஒரு காரில் சென்றுள்ளார்.

நிகழ்ச்சி முடிந்ததும் மீண்டும் காரில் புறப்பட்டு கூத்தனூர் கிராமத்துக்கு திரும்பி சென்றபோது, திடீரென காரின் டயர் வெடித்து டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய சாலை ஓரம் இருந்த ஒரு புளிய மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ராஜகோபாலன் மற்றும் உறவினர்கள் குமார் (வயது 40), விவசாயி. பூபாலன் (38), உமாமகேஸ்வரி (33), நாகபூஷனம் (62) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் செய்யாறு அரசு மருத்துவமனையில்சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

எனினும், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி குமார் பரிதாபமாக உயிரிழந்தார். மற்றவர்கள் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து செய்யாறு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Updated On: 12 Dec 2021 7:38 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. காஞ்சிபுரம்
    45 ஆண்டு பழமை வாய்ந்த 30 டன் எடையுள்ள அரச மரம் மீண்டும் நடவு
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. போளூர்
    ஜவ்வாது மலையில் பலாப்பழம் விளைச்சல் அமோகம்: விவசாயிகள் மகிழ்ச்சி!
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. திருவண்ணாமலை
    எஸ் கே பி கல்வி குழுமத்தின் மாபெரும் ஓவியம், நடனம், திருக்குறள்,...
  8. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் தேவையற்ற புதைவட கேபிள்களை அகற்ற மனு
  9. குமாரபாளையம்
    பள்ளிபாளையத்தில் கனமழை: பிரதான சாலைகளில் சாய்ந்த இரு மரங்கள்
  10. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!