/* */

செய்யாறு அருகே போலீசாரை கண்டித்து பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்

செய்யாறு அருகே தொழுப்பேடு ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் போலீசாரை கண்டித்து பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

HIGHLIGHTS

செய்யாறு அருகே போலீசாரை  கண்டித்து பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
X

செய்யாறு அருகே போலீசாரை கண்டித்து பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு ஒன்றியம் தொழுப்பேடு கிராமத்தில் சரியாக குடிநீர் விநியோகிக்கவில்லை என்றும் சாலை தெரு விளக்கு வசதி போன்ற அடிப்படை வசதிகள் எதுவும் செய்யப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக அதே கிராமத்தை சேர்ந்த பா.ஜ.க. பிரமுகர் பரசுராமன் மற்றும் சிலர் ஊராட்சி மன்ற தலைவர் வார்டு உறுப்பினர்களிடம் கேட்டதாக தெரிகிறது.

இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர் துரை, பரசுராமன் தன்னை ஜாதி பெயரை கூறி இழிவு படுத்தியதாக தெரிவித்து கடந்த 22 ஆம் தேதி செய்யாறு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பரசுராமனை கைது செய்தனர்.

இந்நிலையில் வடக்கு மாவட்ட பா.ஜ.க. சார்பில் செய்யாறு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன் பரசுராமன் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பா.ஜ.க. மாவட்ட தலைவர் ஏழுமலை ,நகரத் தலைவர் லட்சுமணன் ,மாவட்ட துணை தலைவர் பன்னீர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Updated On: 30 Aug 2022 8:20 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...