/* */

செய்யாற்றில் வங்கி ஊழியர்கள் மூன்று பேருக்கு கொரோனா

செய்யாற்றில் செயல்பட்டு வரும் அரசுடைமையாக்கப்பட்ட வங்கியில் பணிபுரியும்‌ 3 ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது

HIGHLIGHTS

செய்யாற்றில் வங்கி ஊழியர்கள் மூன்று பேருக்கு கொரோனா
X

திருவண்ணாமலை மாவட்டம்‌,செய்யாறு காந்தி சாலையில் உள்ள அரசுடைமையாக்கப்பட்ட வங்கி கிளையில்‌ பணிபுரியும் 20-க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தியதில் 3 பேர்க்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து தூய்மை பணியாளர்களை கொண்டு வங்கி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. தொடர்ந்து மறுதேதி குறிப்பிடாமல் வங்கிக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கொரோனா தொற்று கண்டறியப்பட்ட வங்கி ஊழியர்கள் வசிக்கும் வீதிகள், அன்று அவர்களுடன் தொடர்பில் இருந்த வாடிக்கையாளர்கள் அவர்கள் வசிக்கும் பகுதிகளில் நகராட்சி ஊழியர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வங்கியை நாடி வரும் வாடிக்கையாளர்கள், ஊரக வேலை திட்ட பணியாளர்கள், மகளிர் குழுவினர், சிப்காட் நிறுவன ஊழியர்கள், மின்வாரிய ஊழியர்கள் என பலதரப்பினர் வங்கி சேவை கிடைக்காமல் அவதிப்பட்டனர்.

Updated On: 13 Jan 2022 6:43 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மாம்பழத்தை தண்ணீரில் ஊற வைத்து உண்பதின் அவசியம் என்ன..?...
  2. லைஃப்ஸ்டைல்
    10 ஆண்டு திருமண நாள் மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. நாமக்கல்
    திருச்செங்கோடு நகராட்சி குப்பைக்கிடங்கில் தீ விபத்து: மாவட்ட ஆட்சியர்...
  4. லைஃப்ஸ்டைல்
    காதல் கிளியே காதல் கிளியே, உன்னை நான் காதலிக்கலையே...! - மறைமுக...
  5. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் முயல் வேட்டையாடிய 10 பேர் கைது ரூ.1 லட்சம் அபராதம்
  6. லைஃப்ஸ்டைல்
    கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே - திருமண நாள் வாழ்த்துக்கள்
  7. திருவள்ளூர்
    ஆக்சிஜன் சிலிண்டருடன் மனு கொடுக்க வந்த நுரையீரல் பாதிக்கப்பட்ட நபர்
  8. கோவை மாநகர்
    கோவையில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு மர்ம நபர்கள் தீ...
  9. பொள்ளாச்சி
    ஆனைமலை ஆற்றில் கலக்கும் கழிவு நீருடன் மனு கொடுக்க வந்த சமூக ஆர்வலர்
  10. குமாரபாளையம்
    மதுக்கடை பார் ஊழியரை தாக்கியதாக அ.தி.மு.க. நகர செயலாளர் மீது புகார்