செய்யாறு அரசு மேல்நிலை பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

செய்யாறு அரசு  மேல்நிலை பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைபள்ளியில் நடந்த  போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதி மொழியை சட்டமன்ற உறுப்பினர் ஜோதி வாசிக்க அனைவரும் உறுதி மொழியை ஏற்றுக்கொண்டனர்

செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வில் ஜோதி எம்.எல்.ஏ. பங்கேற்றார்.

செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் செய்யாறு மாவட்ட கல்வி அலுவலர் நளினி தலைமை தாங்கினார்.திருவத்திபுரம் நகரமன்ற தலைவர் ஆ.மோகனவேல், நகராட்சி ஆணையாளர் ரகுராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயகாந்தன் வரவேற்றார்.

சிறப்பு விருந்தினராக செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஒ.ஜோதி கலந்துகொண்டு போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதி மொழியை வாசிக்க செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் செய்யாறு அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி பயிலும் 2500 மாணவ மாணவிகள் உறுதி மொழியை ஏற்றுக்கொண்டனர்.

நிகழ்ச்சியில் நகர மன்ற உறுப்பினர் வழக்கறிஞர் விஸ்வநாதன், ஒன்றிய செயலாளர்கள் ஞானவேல், திராவிட முருகன், முன்னாள் நகர செயலாளர் சம்பத், சின்னதுரை, பள்ளி மேலாண்மை குழு தலைவர் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை உமா மகேஸ்வரி நன்றி கூறினார்.

Tags

Next Story