/* */

ஷேர் ஆட்டோ கவிழ்ந்து 17 பேர் காயம்

செய்யாறு அருகே ஷேர் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஊரக வேலை திட்ட பணியாளர்கள் 17 பேர் காயமடைந்தனர்.

HIGHLIGHTS

ஷேர் ஆட்டோ கவிழ்ந்து 17 பேர் காயம்
X

விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை  செய்யாறு எம்எல்ஏ ஜோதி சந்தித்து ஆறுதல் கூறினார்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு ஒன்றியம் அண்ணாநகர் பகுதியை சேர்ந்த சிலர் ஊரக வேலை திட்ட பணிகளில் ஈடுபட்டு வந்தனர். ஆற்காடு செய்யாறு சாலையில் அரசு பாலிடெக்னிக் அருகே சென்றபோது ஷேர் ஆட்டோ திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது.

இதில் ஆட்டோ ஓட்டுநர் மற்றும் இரண்டு ஆண்கள் 15 பெண்கள் என 17 பேர் காயமடைந்தனர் இவர்கள் செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தகவலறிந்த செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஜோதி விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பணியாளர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் மருத்துவர்களிடம் சிறப்பு கவனம் செலுத்தி உரிய சிகிச்சை அளிக்கவும் பரிசோதனைக்கான மருத்துவ கட்டணத்தை செலுத்துவதாகவும் அவர் அறிவித்தார்.

Updated On: 19 Oct 2021 8:23 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  2. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  3. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  4. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  5. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  6. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  8. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  9. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  10. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?