/* */

தூசி அருகே ஆட்டோ கவிழ்ந்து 12 பெண்கள் படுகாயம்

தூசி அருகே ஆட்டோ கவிழ்ந்து 12 பெண்கள் படுகாயமடைந்தனர்.

HIGHLIGHTS

தூசி அருகே ஆட்டோ கவிழ்ந்து 12 பெண்கள் படுகாயம்
X

விபத்துக்குள்ளான ஆட்டோ.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் தாலுகா வயலாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் 12 பெண்கள் சிப்காட் தொழிற்சாலை ஷூ கம்பெனியில் வேலை செய்து வருகின்றனர். அவர்கள் இன்று காலை 8 மணி அளவில் வழக்கம்போல ஆட்டோவில் வேலைக்கு புறப்பட்டனர். ஆட்டோவை சோதியம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த டிரைவர் புருஷோத்தமன் ஓட்டிச் சென்றார்.

தூசி அருகே பாவூர் சோதியம்பாக்கம் சாலையில் சென்றபோது எதிரே கல்குவாரியில் ஜல்லி கற்களை ஏற்றி வந்த லாரி, ஆட்டோ மீது உரசுவது போல் வந்துள்ளது. இதனால் ஆட்டோ டிரைவர் ஆட்டோவை திருப்பி உள்ளார். இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோ அங்குள்ள கோழிப்பண்ணையில் மோதி கவிழ்ந்தது. இதில் டிரைவர் புருஷோத்தமன் மற்றும் 12 பெண் தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர். அவர்களை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு காஞ்சீபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து தூசி சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

Updated On: 30 April 2022 6:53 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  2. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  3. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    தாலியில் கருப்பு மணிகள் சேர்த்து அணிவது ஏன் என்று தெரியுமா?
  6. இந்தியா
    பணமோசடி வழக்கில் ஜார்க்கண்ட் அமைச்சர் ஆலம்கீர் ஆலம் கைது
  7. லைஃப்ஸ்டைல்
    என்னுயிரில் வாழ்பவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  8. உலகம்
    ஸ்லோவாக்கியாவின் பிரதமர் மீது பலமுறை சுடப்பட்டதையடுத்து, உடல்நிலை...
  9. உலகம்
    மாற்றியமைக்கப்பட்ட பன்றி சிறுநீரக மாற்று சிகிச்சையைப் பெற்றவர் மரணம்
  10. வீடியோ
    கலை அறிவியல் கல்லூரிகளில் அலைமோதும் கூட்டம் | இது தான் காரணமா ?TNGASA...