/* */

தேமுதிகவிற்கு எதிர்காலம் தொடங்கிவிட்டது தொண்டர்கள் என மகிழ்ச்சி

அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக வெளியேறியதால் தொண்டர்கள் பட்டாசுகளை வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியாக கொண்டாடினர். தேமுதிகவுக்கு எதிர் காலம் தொடங்கி விட்டதாக தொண்டர்கள் மகிழ்ச்சி......

HIGHLIGHTS

தேமுதிகவிற்கு எதிர்காலம் தொடங்கிவிட்டது தொண்டர்கள் என மகிழ்ச்சி
X

தேமுதிக அதிமுக கூட்டணி குறித்து தொடர்ந்து தமிழகத்தில் பரபரப்பு நிலவி வந்த நிலையில் அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக வெளியேறுவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் பரபரப்பு அறிக்கை வெளியிட்டதை அடுத்து திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகாவில் தேமுதிக தொண்டர்கள் ஆரணி கூட்ரோடு, பேருந்து நிலையம், மார்க்கெட் ஆகிய பகுதிகளில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்.

கட்சித் தலைமை சரியான நேரத்தில் சரியான முடிவை தற்போது எடுத்துள்ளதாகவும். தேமுதிகவுக்கு எதிர் காலம் தொடங்கி விட்டதாகவும் தொண்டர்கள் தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் நகர செயலாளர் செல்வதுரை, மாவட்ட அவைத்தலைவர் டி.பி. சரவணன், ஜவகர் எல்லப்பன், பெருமாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Updated On: 9 March 2021 5:45 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!