/* */

ஊராட்சி செயலாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்

வாணாபுரம் அருகே ஊராட்சி செயலாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

ஊராட்சி செயலாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்
X

சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

திருவண்ணாமலை மாவட்டம் வாணாபுரம் அருகே ஊராட்சி செயலாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சதாகுப்பம் கிராமத்தில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் நீர்நிலைகள் மற்றும் அரசுக்கு சொந்தமான இடங்களில் தூய்மை பணி நடைபெற்று வருகிறது.

அப்பகுதியை சேர்ந்த 1 மற்றும் இரண்டாவது வார்டு பொதுமக்களுக்கு அந்தப்பகுதியில் உள்ள கால்வாயில் வேலை வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. வேலை செய்து கொண்டிருக்கும் போது அங்கு வந்த ஊராட்சி செயலாளர் அஜித்குமார் , பணியில் இருந்த பெண்களை ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது. இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் தட்டிக் கேட்டனர்.

உடனே ஊராட்சி செயலாளர் அஜித் குமார் தனது இருசக்கர வாகனத்தை எடுத்து செல்லும்போது அங்கு வேலை பார்த்த ஒரு பெண்ணின் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றதாக கூறப்படுகிறது இதனால் ஆத்திரமடைந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உடனடியாக சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வானபுரம் காவல் சபின் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் பணி பிரிவு காவலர் ராமஜெயம் மற்றும் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆனால் பேச்சுவார்த்தையில் சமூக தீர்வு ஏற்படாததால் கள்ளக்குறிச்சி திருவண்ணாமலை சாலையில் சதா குப்பம் வளைவு பகுதியில் சாலையின் நடுவே அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போலீசார் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அன்பழகனுக்கு தகவல் தெரிவித்தனர் தகவல் அறிந்து வந்த மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார் பொதுமக்கள் ஊராட்சி செயலாளரின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் அவர் இங்கு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

போலீசார் மற்றும் அதிகாரிகள் சாலை மறியலில் ஈடுபட்ட பொது மக்களிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை அடுத்து சாலை மறியல் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் கூறுகையில் மாவட்ட கலெக்டருக்கு தகவல் தெரிவித்து துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதற்கு பரிந்துரைப்பதாக தெரிவித்துள்ளார்.

Updated On: 19 Aug 2023 2:39 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...