/* */

தொடக்க கூட்டுறவு கடன் சங்கத்தில் பணம் கையாடல் தொடர்பாக மூவர் சஸ்பெண்ட்

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ. 9 லட்சம் கையாடல் தொடர்பாக 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

தொடக்க கூட்டுறவு கடன் சங்கத்தில் பணம் கையாடல் தொடர்பாக மூவர் சஸ்பெண்ட்
X

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை அடுத்த சொப்பனத்தல் கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் இயங்கி வருகிறது.இந்த கடன் சங்கத்தில் விவசாயிகளின் சேமிப்பு கணக்குகளில் இருந்து பல லட்சம் ரூபாய் கையாடல் செய்துள்ளதாக மாவட்ட பதிவாளருக்கு புகார்கள் சென்றன.

இதனையடுத்து கூட்டுறவு கடன் சங்கங்களின் மாவட்ட இணை பதிவாளர் நடராஜன், துணைப் பதிவாளர் வசந்த லட்சுமி ஆகியோரின் உத்தரவின் பேரில் அதிகாரிகள் கடந்த ஒரு வாரமாக கூட்டுறவு சங்கத்தின் செயலாளர் சீனிவாசன் உர விற்பனையாளர் வெங்கடேசன் மற்றும் விற்பனையாளர் விஜயன் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

இதில் விவசாயிகளின் சேமிப்பு கணக்கில் இருந்து ரூ. 9 லட்சம் கையாடல் செய்துள்ளது தெரியவந்தது. மாவட்ட இணை பதிவாளர் துணைப்பதிவாளர் பரிந்துரையின் பேரில் சீனிவாசன், வெங்கடேசன் ,விஜயன் ஆகிய மூன்று பேரை இடை நீக்கம் செய்து உத்தரவிட்டனர்.தொடர்ந்து கூட்டுறவு கடன் சங்கத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

Updated On: 1 July 2022 1:26 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...