/* */

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரே நாளில் மூன்று குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் நடைபெறவிருந்த மூன்று குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டது

HIGHLIGHTS

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரே நாளில் மூன்று குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்
X

தண்டராம்பட்டு அடுத்த சாத்தனூர் கிராமத்தைச் சேர்ந்த 17 வயதான பிளஸ்-2 மாணவிக்கும் தண்டராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த வாலிபருக்கும் நேற்று திருமணம் நடைபெற இருந்தது. இதையறிந்த சைல்டு லைன், சமூக நலத்துறை, காவல்துறை அலுவலர்கள் பெண்ணின் பெற்றோரிடம் குழந்தை திருமணத்தை பற்றி எடுத்துக்கூறி மாணவியை மீட்டனர்.

இதேபோல் ராதாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட அகரம் கிராமத்தைச் சேர்ந்த 16 வயது பெண்ணுக்கும் மலைப்பாம்பு அடி பல்லியம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த வாலிபருக்கும் நேற்று நடைபெற இருந்த திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.

மேலும் மேல்பாய்ச்சார் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது பெண்ணுக்கும் ஊத்தங்கரையை சேர்ந்த வாலிபருக்கும் நடைபெற இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.

பின்னர் 3 சிறுமிகளும் திருவண்ணாமலை அருகே பெரும்பாக்கம் குழந்தைகள் நல காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

சைல்டு ஹெல்ப்லைன் ஒருங்கிணைப்பாளர் அசோக், தினேஷ், சப்-இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ், முத்துக்குமாரசாமி, வட்டார விரிவுரையாளர் அம்சவல்லி, ஊர் நல அலுவலர் ராணி மற்றும் மகளிர் குழு உறுப்பினர்கள் உதவியுடன் ஒரே நாளில் 3 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டது.

Updated On: 10 Sep 2021 5:41 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    எவரெஸ்ட், MDH மசாலாப் பொருட்களை நேபாளத்தில் விற்பனை செய்ய தடை
  2. நாமக்கல்
    கொல்லிமலையில் ஜவகர் சிறுவர் மன்ற கோடைகால கலை பயிற்சி
  3. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  4. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  8. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்