விநாயகர் சிலை கரைக்க சென்ற வாலிபர், நீரில் மூழ்கி உயிரிழப்பு

விநாயகர் சிலை கரைக்க சென்ற வாலிபர், நீரில் மூழ்கி உயிரிழப்பு
X

நீரில் மூழ்கி வாலிபர் உயிரிழப்பு (பைல் படம்)

திருவண்ணாமலையில், விநாயகர் சிலை கரைக்க சென்ற வாலிபர், நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

விநாயகர் சிலை கரைக்க சென்ற வாலிபர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை அடுத்த மேல்புழுதியூர் ஏரியில் விநாயகர் சிலை கரைக்கும் பணிகள் நேற்று நடந்தன. அப்போது பக்கிரிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ராஜ் என்ற சதீஷ் நண்பர்களுடன் கரைப்பதற்காக தண்ணீரில் இறங்கினார். அப்போது அவர் நீரில் மூழ்கினார்.

அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு கரைக்கு கொண்டு வந்து 108 ஆம்புலன்சுக்கு தெரிவித்தனர். ஆனால் ஆம்புலன்ஸ் வராததால், இருசக்கர வாகனத்தில் அவரை செங்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். டாக்டர் பரிசோதித்தபோது சதீஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து செங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விநாயகர் சதுர்த்தி விழாவின்போது மின்சாரம் தாக்கியதில் கல்லூரி மாணவர் உயிரிழப்பு

செங்கம் அருகே விநாயகர் சதுர்த்தி விழாவின்போது மின்சாரம் தாக்கியதில் கல்லூரி மாணவர் உயிரிழந்தார்

செங்கம் அருகே உள்ள பெரியதள்ளபாடி பகுதியை சேர்ந்தவர் மதன்குமார் (வயது 18). இவர் செங்கத்தை அடுத்த முன்னூர்மங்கலம் கிராமத்தில் உள்ள அவரது பாட்டி நீலம்மாள் என்பவர் வீட்டில் தங்கி தனியார் தொழில்நுட்பக் கல்லூரியில் படித்து வந்தார்.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு முன்னூர்மங்கலம் பகுதியில் இவரது வீட்டின் அருகே விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடந்தது. விழாவையொட்டி ஒலி பெருக்கி அமைக்கப்பட்டு இருந்தது. மதன்குமார் கையில் ஒலி பெருக்கியின் மைக்கை வைத்திருந்ததாக கூறப்படுகிறது. அந்த மைக்கில் மின்சாரம் கசிந்ததாக தெரிகிறது. அப்போது அதனை கையில் வைத்திருந்த மதன்குமார் மீது மின்சாரம் பாய்ந்ததில், அவர் அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்தார்.

அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு செங்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். டாக்டர்கள் பரிசோதித்தபோது மதன்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து புதுப்பாளையம் வழக்குப்பதிவு செய்து மதன் குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

புதுப்பாளையம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் காமராஜ் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

Next Story
ai powered agriculture