/* */

வீட்டில் இறந்த மகள். சோகத்தில் காப்புக்காட்டில் விஷமருந்தி உயிரிழந்த தந்தை

திருவண்ணாமலை அருகே ஆசிரியர், மகள் அடுத்தடுத்து மரணம்: போலீசார் விசாரணை

HIGHLIGHTS

வீட்டில் இறந்த மகள். சோகத்தில் காப்புக்காட்டில் விஷமருந்தி உயிரிழந்த தந்தை
X

தந்தை, மகள் அடுத்தடுத்து மரணமடைந்ததை தொடர்ந்து போலீசார் விசாரணை'

விருதுநகரை சேர்ந்தவர் சிவபாலன் 40; இவரது மனைவி ரம்பை 38; இவர்களது மகள் ஸ்ரீதேவிபிரியா 16; திருவண்ணாமலை அடுத்த சே.கூடலுார் அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியராக சிவபாலன் பணிபுரிந்து வந்ததால், சே.கூடலுார் அடுத்த கீழ்செட்டிப்பட்டு கிராமத்தில் வசித்து வந்தார்.

இந்நிலையில் இவரது மகள் ஸ்ரீதேவிபிரியா நேற்று முன்தினம் மாலை உடல்நலக்குறைவால் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு உயிரிழந்தார். இதையடுத்து உடல் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு அவரது உடல் நேற்று வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

நேற்று முன்தினம் காலை வீட்டிலிருந்து வெளியே சென்ற சிவபாலன் வீடு திரும்பவில்லை. அவரை குடும்பத்தினர் தேடி வந்த நிலையில் அப்பகுதியிலுள்ள கண்ணமடை காப்புகாட்டில் விஷம் குடித்தும் கையை கத்தியால் அறுத்து கொண்டும் இறந்து கிடந்துள்ளார்.

தகவலின்படி தச்சம்பட்டு போலீசார் அவரது சடலத்தை மீட்டனர். பின் மகள் மற்றும் தந்தை அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Updated On: 11 March 2022 6:21 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  2. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  3. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  4. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  5. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு
  6. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!
  7. திருப்பரங்குன்றம்
    கூடலகப் பெருமாள் கோயில், வைகாசிப் பெருந் திருவிழா!
  8. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...
  9. உலகம்
    எகிப்தியர்கள் பிரமிடுகளை எவ்வாறு கட்டினார்கள் என்ற மர்மத்துக்கு...
  10. வீடியோ
    NO பருப்பு NO பாமாயில் எதனால் இந்த நிலைமை || #mkstalin #tngovt...