மேல்செட்டிப்பட்டு ஊராட்சியில், புதிய ரேஷன் கடை திறப்பு

மேல்செட்டிப்பட்டு ஊராட்சியில், புதிய ரேஷன் கடை திறப்பு
X

ரேஷன் கடையை திறந்து வைத்து, பயனாளிகளுக்கு உணவு பொருட்களை வழங்கிய கலெக்டர் முருகேஷ்.

மேல்செட்டிப்பட்டு ஊராட்சியில் நடந்த புதிய ரேஷன் கடை திறப்பு விழாவில், கலெக்டர் முருகேஷ் கடையை திறந்து வைத்தார்.

மேல்செட்டிப்பட்டு ஊராட்சியில், புதிய ரேஷன் கடை திறப்பு விழா, கலெக்டர் முருகேஷ் திறந்து வைத்தார்.

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அருகில் உள்ள மேல்செட்டிப்பட்டு ஊராட்சியில் புதிய ரேஷன் கடை திறப்பு விழா நடைபெற்றது. மாநில தடகள சங்க துணைத்தலைவர் எ.வ.வே.கம்பன் முன்னிலை வகித்தார். கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கி, ரேஷன் கடையை திறந்து வைத்து, பயனாளிகளுக்கு உணவு பொருட்களை வழங்கி பேசியதாவது:-

திருவண்ணாமலை மாவட்டத்தில் எந்த ஒரு பிரச்னையாக இருந்தாலும், அதை நான் தீர்ப்பதற்கு அமைச்சர் எ.வ.வேலுவை அணுகுவேன். அவர் எல்லா பிரச்சினைகளையும் உடனுக்குடன் தீர்த்து வைப்பதால் தான் நீங்கள் கேட்கிற கோரிக்கை நிறைவேற்றப்படுகிறது. அந்த வகையில் தான், இந்த ரேஷன் கடையும் திறக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் வெளி மார்க்கெட்டில் நெல்லை விற்பனை செய்யாமல், அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தங்கள் உற்பத்தி நெல்லை விற்பனை செய்ய வேண்டும். திருவண்ணாமலை மாவட்டத்தில் நெல் கொள்முதல் என்பது குறைவாக உள்ளது. எனவே, அதிக அளவில் நெல் தேவைப்படுவதால் விவசாயிகள் இன்னும் எந்தெந்த இடங்களில் நேரடி கொள்முதல் நிலையம் வேண்டும் என்று கேட்கிறார்களோ அந்த இடங்களில் எல்லாம் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படும். என கலெக்டர் முருகேஷ் பேசினார்.

முன்னதாக கூட்டுறவு இணைப்பதிவாளர் நடராஜன் வரவேற்றார். நிகழ்ச்சியில் திருவண்ணாமலை ஒன்றியக்குழு தலைவர் கலைவாணி கலைமணி, ஒன்றிய செயலாளர்கள் கோவிந்தன், மெய்யூர் சந்திரன், மேல்செட்டிப்பட்டு கூட்டுறவு சொசைட்டி தலைவர் ஏழுமலை, செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, சேகர், விவசாய அணி அமைப்பாளர் மெய்கண்டன், மாவட்ட கவுன்சிலர் சரவணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

அதைத் தொடர்ந்து கலெக்டர் முருகேஷ் மேல்செட்டிப்பட்டு கிராமத்தில் இருந்து மயானத்திற்கு செல்லும் சாலை வசதி, ஊராட்சியில் உள்ள சாலை வசதி குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Next Story
ai and future cities