சட்டவிரோத செயலில் ஈடுபட்ட நபர்கள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது

சட்டவிரோத செயலில் ஈடுபட்ட  நபர்கள் குண்டர் தடுப்பு  காவல் சட்டத்தில் கைது
X
சட்டவிரோத செயலில் ஈடுபட்ட நபர்களை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய திருவண்ணாமலை கலெக்டர் உத்தரவு பிறப்பித்தார்

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், தாராப்பட்டு கிராமம், பள்ளிவாசல் தெருவை சேர்ந்த 1) பாதுஷா 2) சையத்கோஸ் 3) இமாம் (எ) நிஜாமுதின் 4) சபியுல்லா ஆகிய நான்கு நபர்கள் கலவரத்தில் ஈடுபட்டு, அதே ஊரைச் சேர்ந்த ஷேக் காசிம் என்பவரை கொலை செய்ய முயற்சி செய்ததாக, அவரது மகள் புகார் அளித்திருந்தார்.

இந்த புகாரின் பேரில் சாத்தனூர் அணை காவல் நிலையத்தில், மேல் செங்கம் வட்ட காவல் ஆய்வாளர் வழக்குபதிவு செய்து மேற்கண்ட நான்கு நபர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தார்.

மேற்கண்ட நபர்கள் தொடர்ந்து சட்டவிரோத செயலில் ஈடுபடுவதை தடுப்பதற்காக குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் அடைக்க, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் குமார் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். மாவட்ட ஆட்சியர் முருகேஷ், அவர்கள், மேற்கண்ட நபர்களை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்து, வேலூர் மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

Tags

Next Story
ai in future agriculture