சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பால் வெள்ள அபாய எச்சரிக்கை

சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பால் வெள்ள அபாய எச்சரிக்கை
X

சாத்தனூர் அணை (பைல் படம்).

சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகில் உள்ள சாத்தனூர் அணை 119 அடி உயரம் கொண்டதாகும். இந்த அணையில் 7321 மில்லியன் கனஅடி நீரை தேக்கி வைக்க முடியும். கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாகவும் மற்றும் கிருஷ்ணகிரி அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டதன் காரணமாகவும் சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.

இதனால் கடந்த வாரம் அணை 117 அடியை எட்டியது. அதாவது அணையில் 6875 மில்லியன் கன அடி நீர் தேக்கி வைக்கப்பட்டது. இதையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி உபரி நீரை வெளியேற்றி வந்தனர்.

லேசான நீர்வரத்து இருந்து வந்த நிலையில் தற்போது பரவலாக பலத்த மழை பெய்து வருவதால் மீண்டும் சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது . வினாடிக்கு 4225 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் சாத்தனூர் அணையில் நீரை தேக்கி வைக்க முடியாத நிலையில் அணைக்கு வரும் 4225 கன அடி நீரை அப்படியே தென்பெண்ணை ஆற்றில் மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக தென் பெண்ணை ஆற்றில் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Next Story
ai solutions for small business