/* */

காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய 50 பேர் மீட்பு

செங்கம் அருகே காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய 50 பேரை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.

HIGHLIGHTS

காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய 50 பேர் மீட்பு
X

கோப்புப்படம் 

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை அடுத்துள்ள துரிஞ்சிகுப்பம் அருகே உள்ள மலைப்பகுதியில் நாமக்கல் நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. இங்கு கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழையின் காரணமாக நீர் வரத்து அதிகமாக உள்ளது.

தீபாவளி தினத்தை முன்னிட்டு தொடர் விடுமுறை காரணமாக செங்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து நாமக்கல் நீர்வீழ்ச்சி மற்றும் குப்பநத்தம்அணை, ஜமுனாமரத்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு பொதுமக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

இந்த நிலையில் நாமக்கல் நீர்வீழ்ச்சியில் 50-க்கும் மேற்பட்டோர் தண்ணீர் வரத்தை கண்டுகளித்து குளித்துக் கொண்டு இருந்தனர். இந்த நிலையில் திடீரென காட்டாற்று வெள்ளம் வரத் தொடங்கியதால், வெள்ளத்தை தாண்டி நீர்வீழ்ச்சியின் மறுகரைக்கு வரமுடியாமல் அங்கிருந்தவர்கள் சிக்கி தவித்தனர்.

இதுகுறித்து செங்கம் தீயணைப்பு துறை வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையை வீரர்கள் சுமார் 50 பேரை கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர். இந்த மீட்பு பணியின் போது வருவாய்த்துறையினர் மற்றும் காவல்துறையினர் உடனிருந்தனர்.

Updated On: 6 Nov 2021 1:44 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை வாழ்த்துக்கள் தமிழ்: 50 பொன்மொழிகளுடன்
  2. உலகம்
    இந்தியா நிலவில் தரையிறங்கியபோது பாகிஸ்தானில் நடந்தது என்ன? வைரலான...
  3. சினிமா
    கையில் கட்டுடன் கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு புறப்பட்ட ஐஸ்வர்யா ராய்
  4. காஞ்சிபுரம்
    மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை சுற்றி சுற்று சுவர் அமைக்க
  5. குமாரபாளையம்
    கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2740 கோழிகள் தீயில் கருகி...
  6. கோவை மாநகர்
    கேரளா திரைப்பட தயாரிப்பாளர் ஜானி சகாரிகாவை மோசடி வழக்கில் கைது செய்த...
  7. இந்தியா
    வாரணாசியில் வேட்பு மனு நிராகரிப்பு: அழுவதா? சிரிப்பதா? என நகைச்சுவை...
  8. தேனி
    துாய்மைப்பணியாளரின் அன்புள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    நண்பர்களின் பிறந்தநாளுக்கு நகைச்சுவையான தமிழ் வாழ்த்துக்கள்!
  10. வீடியோ
    வாழ்நாளில் தோல்வியே சந்திக்காத பயணம்எதனால இது சாத்தியமாகிறது?#modi...