/* */

செங்கம் அருகே தண்ணீரில் மூழ்கி சிறுவன்-சிறுமி உயிரிழப்பு

செங்கம் அருகே குளிக்க சென்ற சிறுவன்-சிறுமி தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

HIGHLIGHTS

செங்கம் அருகே தண்ணீரில் மூழ்கி சிறுவன்-சிறுமி  உயிரிழப்பு
X

தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த விஷ்ணு

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள பரமனந்தல் தீபம் நகரை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகள் கீர்த்தனா (வயது 11) மற்றும் அவர்களது உறவினரான புதுப்பாளையம் பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவருடைய மகன் விஷ்ணு (11) ஆகியோர் வீட்டின் அருகே உள்ள செய்யாற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளனர்.

இதனையடுத்து 2 பேரும் ஆற்றில் இறங்கி குளிக்கும் போது ஆழம் அதிகம் உள்ள பகுதியில் சிக்கிக் கொண்ட இருவரும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் செங்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 15 May 2022 1:58 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்