தானிப்பாடி அருகே ஓடும் ஆம்புலன்சில் 'குவா குவா': தாயும் சேயும் நலம்
ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிறந்த ஆண் குழந்தை.
திருவண்ணாமலை மாவட்டம் தானிப்பாடி அருகே உள்ள அருவங்காடு மலை கிராமத்தை சேர்ந்தவர் ராமன், விவசாயி. இவரின் மனைவி பவித்ரா (வயது 21). இவர் கர்ப்பமாக இருந்தார். இந்த நிலையில் அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது.
இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் அவர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். ஆம்புலன்சை டிரைவர் குமார் என்பவர் ஓட்டினார். போந்தை என்ற கிராமம் அருகே ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்தபோது பவித்ராவுக்கு பிரசவ வலி அதிகரித்தது.
எனவே, மருத்துவ உதவியாளர் சேக்முத்தலி என்பவர் பிரசவம் பார்த்தார். அதில், பவித்ராவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் தாயும், சேயும் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu