/* */

விடுமுறையில் ஊருக்கு வந்த ராணுவ வீரர் விபத்தில் உயிரிழப்பு

விடுமுறையில் ஊருக்கு வந்த ராணுவ வீரர் தண்டராம்பட்டு அருகே கார் மோதிய விபத்தில் உயிரிழந்தார்.

HIGHLIGHTS

விடுமுறையில் ஊருக்கு வந்த ராணுவ வீரர் விபத்தில் உயிரிழப்பு
X

கார் மோதியதில் உயிரிழந்த  ராணுவ வீரர்   சத்யராஜ்

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் தாலுகா சொக்கநாதன் கிராமம் வேடியப்பன் கோவில் தெருவை சேர்ந்தவர் சத்யராஜ் (வயது 25). பஞ்சாபில் ராணுவ வீரராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி சினேகா (20). இவர்களுக்கு திருமணமாகி ஓராண்டு ஆகிறது.

விடுமுறையில் ஊருக்கு வந்த ராணுவ வீரர் சத்யராஜ் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் காட்டாம்பூண்டி கிராமத்தில் மாமனார் வீட்டில் உள்ள தனது மனைவியை பார்ப்பதற்காக சென்றார்.

ராதாபுரம் கிராமத்துக்கு அருகே சென்று கொண்டிருந்த போது திருவண்ணாமலை நோக்கி வந்த கார் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சத்யராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து சினேகா கொடுத்த புகாரின் பேரில் தண்டராம்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவர் தினகரன் என்பவரை கைது செய்தனர்.

Updated On: 27 March 2022 3:19 AM GMT

Related News

Latest News

  1. மயிலாடுதுறை
    மயிலாடுதுறையில் பள்ளி வாகனங்கள் ஆய்வு..!
  2. வானிலை
    தமிழகத்தில் 6 நாட்களுக்கு கனமழை: வானிலை ஆய்வு மையம்
  3. திருவள்ளூர்
    மின்சாரம்,குடிநீர் தட்டுப்பாடு : பொதுமக்கள் சாலை மறியல்..!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் தரும் முருங்கைக் கீரை சூப் செய்வது எப்படி?
  5. உலகம்
    இன்னலுறும் நோயாளிகளுக்கு உதவும் செவிலியரை போற்றுவோம்..! நாளை செவிலியர்...
  6. வீடியோ
    சபையில் வைத்து கிழிக்கப்பட்ட ஐ.நா தீர்மானம் | இது தான் காரணமா ?...
  7. ஈரோடு
    கோபியில் கல்லூரிக் கனவு வழிகாட்டல் நிகழ்ச்சி: மாவட்ட ஆட்சியர்...
  8. வீடியோ
    🔴LIVE : பள்ளிக்கரணை ஆணவக்கொலை வழக்கு பற்றி மூத்த வழக்குரைஞர்...
  9. ஈரோடு
    ஈரோட்டில் பள்ளி வாகனங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
  10. நாமக்கல்
    நாமக்கல் காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் 100...