/* */

செங்கம் அருகே ஆற்றை கடக்க முயன்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட முதியவர்

ஆற்றை கடக்க முயன்ற முதியவர் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டார் , பாலம் இல்லாததை கண்டித்து சாலைமறியலில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

செங்கம் அருகே ஆற்றை கடக்க முயன்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட முதியவர்
X

செங்கம் அருகே ஆற்றை கடக்க முயன்ற முதியவர் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டார். பாலம் இல்லாததை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். 

செங்கம் அருகே ஆற்றை கடக்க முயன்ற முதியவர் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டார். பாலம் இல்லாததை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் செய்யாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்த நிலையில் செங்கத்தை அடுத்துள்ள தோக்கவாடியில் ஒருவர் இறந்துவிட்டார். இதனையடுத்து அவரது உடலை மாற்று வழியில் சுற்றிக்கொண்டு தோக்கவாடி ஆற்றின் மறுகரையில் உள்ள சுடுகாட்டிற்கு கொண்டு சென்று அடக்கம் செய்யப்பட்டது. அப்போது மறுகரையில் இருந்து ஆற்றை கடந்துவர முயன்ற சுப்பிரமணி (வயது 65) என்பவர் ஆற்றில் அடித்துச்செல்லப்பட்டார்.

பாலம் இல்லாததால் ஆற்றின் மறுகரையில் உள்ள சுடுகாட்டிற்கு செல்ல முடியாத சூழல் உள்ளதை கண்டித்தும், ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட சுப்பிரமணியை கண்டுபிடிக்க கோரியும் அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் செங்கம்-திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் துணை போலீஸ் சூப்பிரண்டு சின்னராஜ், இன்ஸ்பெக்டர் சரவணகுமரன், தாசில்தார் முனுசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Updated On: 23 Nov 2021 5:35 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்