நெகிழி பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணா்வு நாடகம்

செங்கத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடைபெற்றது.
செங்கத்தில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து நாடகம் நடத்தி விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது உள்ளிட்ட திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் இங்கு பதிவிடப்பட்டுள்ளது.
செங்கம் புதிய பேருந்து நிலையத்தில் நடத்தப்பட்ட இந்த விழிப்புணா்வு நாடகத்தை பேரூராட்சி செயல் அலுவலா் லோகநாதன் தொடங்கிவைத்தாா்.
கலைஞா்கள் நெகிழி பயன்பாட்டால் ஏற்படும் தீமைகளை பொதுமக்களுக்கு நாடகம் மூலம் நடித்துக் காண்பித்தனா். மேலும் பொதுமக்கள், வணிகா்கள் குப்பைகளை வெளியில் கொட்டாமல் மக்கும் குப்பை, மக்கா குப்பை என தரம் பிரித்து பேரூராட்சி தூய்மைப் பணியாளா்களிடம் வழங்கவேண்டும் நாடகம் மூலம் தகவல் தெரிவித்தனா். இதில், பேரூராட்சி பணியாளா்கள் கலந்து கொண்டனா்.
கண்ணமங்கலம்
இதே போல் கண்ணமங்கலம் பஸ் நிலையத்தில் மக்கும் குப்பை, மக்காத குப்பைகள், பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்பு ணர்வு கலைநிகழ்ச்சி நடைபெற்றது. பேருராட்சி தலைவர் மகாலட்சுமி கோவர்த்தனன் தலைமை தாங்கினார். துணை தலைவர் குமார் முன்னிலை வகித்தார். வார்டு உறுப்பினர்கள் மணி, அமிர்தராஜ், சரிதா, மரகதவல்லி, சையத், முரளி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழக அரசின் பேரூராட்சிகள் துறை சார்பில் நடந்த இந்த கலைநிகழ்ச்சியில் விருத்தாசலம் சிவசக்தி கிராமிய கலைக்குழு முனைவர் வி.என.ராணி மற்றும் குழுவினர் கலந்து கொண்டு பொது மக்களுக்கு பிளாஸ்டிக் ஒழிப்பு, மக்கும் குப்பை மக்கா குப்பைகள் உள்பட பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடத்தினர்.
பொதுமக்களும் இந்த நிகழ்ச்சியை ஆர்வமுடன் பார்த்து ரசித்தனர். முடிவில் கண்ணமங்கலம் பேரூராட்சி சுகாதார மேற்பார்வையாளர் வெற்றி நன்றி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu