/* */

ஆம்புலன்ஸில் உள்ளவர்களை மீட்க வந்த ஆம்புலன்ஸ்

பழுதடைந்த ஆம்புலன்ஸ் வாகனத்தை பயன்படுத்தியதால் நோயாளிகளை அழைத்துச் சென்ற வாகனம் விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது

HIGHLIGHTS

ஆம்புலன்ஸில் உள்ளவர்களை மீட்க வந்த ஆம்புலன்ஸ்
X

விபத்துக்குள்ளான ஆம்புலன்ஸ் 

செங்கம் அரசு மருத்துவமனையில் இருந்து நோயாளிகளை ஏற்றுக்கொண்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்தது.

கோணாங்குட்டை கேட் அருகே சாலையோரம் வைக்கப்பட்டிருந்த காவல்துறை அறிவிப்பு பதாகை மீது வாகனம் மோதியதில், சாலையை விட்டு இறங்கி முட்புதருக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானது.

நல்வாய்ப்பாக உடல்நிலை பாதிக்கப்பட்ட குழந்தை, மற்றும் உறவினர்கள், ஓட்டுனர், மருத்துவ உதவியாளர் ஆகிய 6 பேரும் காயங்களின்றி உயிர் தப்பினர் .

பின்னர் தகவலறிந்து மாற்று 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில், உடல் நலம் பாதிக்கப்பட்ட குழந்தையை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

பிறகு ஜேசிபி இயந்திரம் உதவியோடு பள்ளத்தில் இருந்த 108 ஆம்புலன்சை மீட்டனர். பழுதான ஆம்புலன்ஸ் வாகனத்தை பயன்படுத்தியதால் இந்த விபத்து நேர்ந்ததாக கூறப்படுகிறது

Updated On: 13 Nov 2021 2:21 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    குலதெய்வம் ஒரு குடும்ப உறுப்பினர் இயக்குநர் Perarasu உருக்கம்...
  2. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  3. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  4. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  5. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  6. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  8. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  9. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?