/* */

செங்கம் அருகே அரசு பஸ் டிரைவருக்கு கொலை மிரட்டல் விடுத்த பள்ளி மாணவன்

கத்தியை காட்டி பிளஸ்-2 மாணவர் கொலை மிரட்டல் விடுத்ததால் அதிர்ச்சி அடைந்த டிரைவர் பஸ்சை குறுக்கே நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டார்.

HIGHLIGHTS

செங்கம் அருகே அரசு பஸ் டிரைவருக்கு கொலை மிரட்டல் விடுத்த பள்ளி மாணவன்
X

பைல் படம்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே புதுப்பாளையத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு நேற்று மாலை அரசு பேருந்து வந்து கொண்டிருந்தது.

அந்தப் பேருந்து காஞ்சி வந்ததும் காஞ்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்களை ஏற்றிச் செல்ல வழக்கம்போல் நிறுத்தினார்கள். கூட்டம் அதிகமாக இருந்ததால் படிக்கட்டின் கதவுகளை டிரைவர் சாத்தியுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த கெங்கம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பிளஸ்-2 மாணவன் அரசு பஸ் டிரைவரிடம் சென்று ஏன் படிக்கட்டின் கதவு திறக்காமல் மூடினாய் என்று கேட்டு ஆபாசமாக பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அப்போது அந்த மாணவன் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து காட்டி கொலை செய்து விடுவதாக டிரைவரை மிரட்டி உள்ளர்.

இதனால் அதிர்ச்சியடைந்த பஸ் டிரைவர் பள்ளியின் அருகே உள்ள சாலையில் பஸ்சை குறுக்கே நிறுத்திவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டார்.

தகவல் அறிந்த கடலாடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அரசு பஸ் டிரைவரை சமரசம் செய்தனர். பயணிகளிடமும் மாணவர்களிடமும் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் இது குறித்து கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

இச்சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பிளஸ் டூ படிக்கும் பள்ளி மாணவர் கத்தியை காட்டி மிரட்டியது பேருந்தை நிறுத்தி டிரைவர் போராட்டத்தில் ஈடுபட்டதும் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Updated On: 12 July 2023 2:43 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  3. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  4. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  5. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  6. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  7. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  8. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு
  9. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!
  10. திருப்பரங்குன்றம்
    கூடலழகர் பெருமாள் கோயில், வைகாசிப் பெருந் திருவிழா!