செங்கம் அருகே கிணற்றில் ஆண் சடலம்

செங்கம்  அருகே கிணற்றில் ஆண் சடலம்

செங்கம் அடுத்த புதுப்பாளையம் அருகே கிணற்றில் மிதந்த ஆண் சடலம்

செங்கம் அடுத்த புதுப்பாளையம் அருகே கிணற்றில் ஆண் சடலம்

செங்கம் அடுத்த புதுப்பாளையம் அருகே பனைஓலைபாடி பகுதியில் ரங்கசாமி என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றிலிருந்து பாசனத்திற்காக மோட்டாரை இயக்கியபோது தண்ணீரானது துர்நாற்றம் வீசியதால் கிணற்றின் அருகே சென்று கிணற்றை எட்டி பார்த்து உள்ளார். அப்போது ஆண் சடலம் ஒன்று இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அங்கிருந்தவர்கள் கிராம நிர்வாக அலுவலரான மாரிக்கு தகவல் அளித்துள்ளார். இதனடிப்படையில் கிராம நிர்வாகி அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற செங்கம் காவல் துணை கண்காணிப்பாளர் சரவணகுமரன் மற்றும் புதுப்பாளையம் காவல் உதவி ஆய்வாளர் தமிழரசு ஆகியோர் கிணற்றில் மிதந்த சடலத்தை மீட்க நடவடிக்கை மேற்கொண்டனர்.

அப்போது பொதுமக்கள் உதவியுடன் பிரேதத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இறந்த நபர் யார் என்றும் அவர் மதுபோதையில் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தாரா அல்லது எவரேனும் முன்விரோதம் காரணமாக கொலை செய்து கிணற்றில் வீசி சென்று விட்டனரா என்ற பல்வேறு கோணங்களில் புதுப்பாளையம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story