/* */

சே. கூடலூரில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் திறப்பு

சே. கூடலூரில் ஊராட்சி மன்ற அலுவலக புதிய கட்டிடத்தை அமைச்சர் ஏ.வ. வேலு திறந்து வைத்தார்.

HIGHLIGHTS

சே. கூடலூரில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் திறப்பு
X

ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை பொதுப்பணித்துறை அமைச்சர் எ வ.வேலு ,திறந்து வைத்தார்

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியம் சே. கூடலூர் ஊராட்சியில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில், ரூபாய் 17.64 லட்சம் மதிப்பில் புதியதாக கட்டப்பட்டுள்ளது. இங்குள்ள ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ. வ வேலு திறந்து வைத்து குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

மேலும், திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியம் சே. கூடலூர் ஊராட்சியில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் தூய்மை பாரத இயக்கத்தின் மூலம், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் இல்லங்களில் சேகரமாகும் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை பொதுமக்கள் பிடித்துக் கொடுப்பதற்காக இரண்டு வண்ணங்களில் குப்பை சேகரிக்கும் தொட்டிகளை, 637 குடும்பங்களுக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு வழங்கினார்.

நிகழ்ச்சியில், சட்டமன்ற பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சித் தலைவர் முருகேஷ், நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் ரெட்டி, கூடுதல் ஆட்சியர் பிரதாப், திமுக மாநில மருத்துவர் அணி துணைத் தலைவர் மருத்துவர் கம்பன், அரசு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 15 Jan 2022 1:00 PM GMT

Related News