/* */

குளத்தை தனியாருக்கு குத்தகைக்கு விட்டதை கண்டித்து கிராம மக்கள் போராட்டம்

ஆரணி அருகே குளத்தை தனியாருக்கு குத்தகைக்கு விட்டதை கண்டித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

குளத்தை தனியாருக்கு குத்தகைக்கு விட்டதை கண்டித்து கிராம மக்கள் போராட்டம்
X

குளத்தை தனியாருக்கு குத்தகை வழங்கியதை கண்டித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே ஆதனூர் கிராமத்தில் சுமார் 4,000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

இந்த கிராமத்தில் மையப்பகுதியில் வண்ணார் குளம் அமைந்துள்ளது. பல ஆண்டுகளாக பொதுமக்கள் விவசாயத்திற்கும் குடிநீருக்கும் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் வண்ணார் குளத்தை குடிமராமத்து பணியில் சுமார் ஒரு லட்சம் மதிப்பீட்டில் சீரமைப்பு பணியை தற்போது பாதியில் நிறுத்திவிட்டு ஊராட்சி மன்ற நிர்வாகம் தன்னிச்சையாக கிராமத்தில் குடிநீர் ஆதாரமாக உள்ள குளத்தை தனியாருக்கு மீன் குத்தகைக்கு விட்டுள்ளனர்.

இதனைக் கண்டித்து 100 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒன்றிணைந்து குளத்தின் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உடனடியாக தனியாருக்கு தாரை வார்த்த குளத்தை மீண்டும் கிராம பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 27 Feb 2022 5:53 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    என்னோட இரண்டாவது படம் ஆதி கூட கொஞ்சும் தமிழில் பேசிய Heroine...
  2. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்
  3. வீடியோ
    பெத்தப் பிள்ளைய பாதுகாக்க வக்கில்ல ! #veeralakshmi #savukkushankar...
  4. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  5. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை வானில் பறக்க காத்திருக்கும் ஜோடிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    நாங்கள் காத்துகொண்டு இருக்கிறோம் ! #annamalai #annamalaibjp ...
  7. லைஃப்ஸ்டைல்
    அன்பும், இன்பமும் நிறைந்த இல்லற வாழ்வுக்கான நல்வாழ்த்துக்கள்
  8. பொன்னேரி
    சோழவரம் அருகே லாரி மீது தனியார் கல்லூரி பேருந்து மோதி விபத்து
  9. லைஃப்ஸ்டைல்
    அன்பு தேசத்து இளவரசிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  10. கும்மிடிப்பூண்டி
    கும்மிடிப்பூண்டி: இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ.2 லட்சம்