/* */

ஆரணியில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்தது பற்றி ஆர்.டி.ஓ. விசாரணை

ஆரணியில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது பற்றி ஆர்டிஓ விசாரணை நடத்தினார்.

HIGHLIGHTS

ஆரணியில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்தது பற்றி ஆர்.டி.ஓ. விசாரணை
X

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி புதுகாமூர் ரோடு கே.சி.கே. நகர் பகுதியை சேர்ந்தவர் அமரேசன், உடற்பயிற்சி கூட நிறுவனர் ஆவார். இவருக்கும், தச்சூரை அடுத்த மோட்டூர் பகுதியை சேர்ந்த ரவி மகள் சரண்யா (வயது 24) என்பவருக்கும் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

அமரேசன் கடன் தொல்லையால் மனைவி சரண்யாவிடம், உனது தாய் வீட்டுக்கு சென்று பணம் வாங்கி வா, எனக்கூறி அடிக்கடி தகராறு செய்து வந்ததாக தெரிகிறது. இதனால், மனவேதனை அடைந்த சரண்யா வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்ததும் ஆரணி டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சரண்யாவின் தந்தை ரவி ஆரணி டவுன் போலீசில் புகார் செய்தார். துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து, இளம்பெண் சரண்யாவுக்கு திருமணமாகி 1½ ஆண்டுகள் ஆவதால் ஆரணி வருவாய் கோட்டாட்சியர் கவிதா விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

தற்கொலை செய்து கொண்ட சரண்யாவுக்கு 6 மாதத்தில் அர்ஜுன் என்ற கைக்குழந்தை உள்ளது.

Updated On: 15 May 2022 1:27 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?