/* */

அளவுக்கு அதிகமாக குவிக்கப்பட்டிருந்த மணல் பறிமுதல்

ஆரணியில் அரிசி ஆலை அதிபர் மகன் அளவுக்கு அதிகமாக மணல் குவித்த 30 யூனிட் மணல் பறிமுதல் செய்யப்பட்டது.

HIGHLIGHTS

அளவுக்கு அதிகமாக குவிக்கப்பட்டிருந்த மணல் பறிமுதல்
X

ஆரணியில் அளவுக்கு அதிகமாக குவிக்கப்பட்டிருந்த மணல் 

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பழைய பஸ் நிலையம் அருகில் ஒரு அரிசி ஆலை அதிபரின் மகன் கட்டடம் கட்டி வருகிறார். அங்கு அளவுக்கு அதிகமாக மணல் குவித்திருப்பதாக திருவண்ணாமலை மாவட்ட கலெக்டருக்கு தகவல் கிடைத்தது. இதுபற்றி கலெக்டர், ஆரணி வருவாய் கோட்டாட்சியருக்கு தகவல் தெரிவித்தார்.

அவரது உத்தரவின்பேரில் ஆரணி டவுன் வருவாய் ஆய்வாளர், ஆரணி டவுன் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் பழைய பஸ் நிலையம் அருகே கட்டடப்பணி நடக்கும் இடத்திற்கு சென்று சோதனை செய்தபோது அங்கு மணல் குவிக்கப்பட்டு இருந்தது தெரிந்தது. இதனை தொடர்ந்து ஆரணி - வந்தவாசி நெடுஞ்சாலையில் உள்ள அரிசி ஆலைக்கு சென்று சோதனை செய்தனர். அங்கும் மணல் குவிக்கப்பட்டு இருந்தது.

அவர்கள் அளித்த தகவலின்பேரில் கோட்டாட்சியர் கவிதா, ஆரணி தாசில்தார் சுபாஷ் சந்தர், வேலப்பாடி கிராம நிர்வாக அலுவலர் இளவரசன் ஆகியோர் சம்பந்தப்பட்ட அரிசி ஆலைக்கு வந்தும், புதிய கட்டடம் கட்டும் இடத்துக்கு வந்தும் பார்வையிட்டனர்.

இரு இடங்களில் குவித்து வைத்திருந்த 30 யூனிட் மணலை பொதுப்பணித் துறையினர் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ஆரணி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Updated On: 24 Oct 2021 7:36 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    "நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்": கைவசப்படுத்தும் காதல் மேற்கோள்கள்
  2. குமாரபாளையம்
    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விண்ணப்பங்கள் பதிவு...
  3. நாமக்கல்
    நாமக்கல் டிரினிட்டி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு...
  4. தமிழ்நாடு
    புதிய ‘லே அவுட்’ அனுமதியை நிறுத்த முடியாது..!
  5. வால்பாறை
    பொள்ளாச்சியில் கனமழை காரணமாக ஒரு இலட்சம் வாழைகள் சேதம்
  6. இந்தியா
    உலக அளவிலான மாற்றம் : புலிப்பாய்ச்சலில் இந்தியா..!
  7. லைஃப்ஸ்டைல்
    ‘குடும்பத்தில் சுயநலம் பெருகினால், உறவுகள் விலகிப் போகும்’
  8. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணிகளின் இன்றைய நீர்மட்டம்
  9. வீடியோ
    Ameer-ன் படம் பார்க்க Annamalai-யை அழைத்தோம் !#annamalai #annamalaibjp...
  10. கல்வி
    பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்: மாவட்டவாரியாக தேர்ச்சி விகிதம்