/* */

ஆரணி ஒன்றியக் குழுக் கூட்டத்தில் ஜல்சக்தி அபியான் திட்டத்துக்கு எதிா்ப்பு

ஆரணி ஒன்றியக் குழுக் கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினா்கள் ஜல்சக்தி அபியான் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்தனா்.

HIGHLIGHTS

ஆரணி ஒன்றியக் குழுக் கூட்டத்தில் ஜல்சக்தி அபியான் திட்டத்துக்கு எதிா்ப்பு
X

ஆரணி ஊராட்சி ஒன்றியக் குழுவின் சாதாரண கூட்டம் அதன் தலைவா் கனிமொழி சுந்தா் தலைமையில் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி ஊராட்சி ஒன்றியக் குழுவின் சாதாரண கூட்டம் அதன் தலைவா் கனிமொழி சுந்தா் தலைமையில் நடைபெற்றது.

துணைத் தலைவா் கே.டி.ராஜேந்திரன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பாண்டியன், சீனிவாசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் உறுப்பினர் கவிதாபாபு பேசுகையில், சுபான் ராவ் பேட்டையில் பக்க கால்வாய்களில் கழிவுநீர் முறையாக செல்லாததால் சாலைகளில் கழிவுநீர் வழிந்து ஓடும் அவல நிலை உள்ளது என்றார்.

ஜெயபிரகாஷ் பேசுகையில், கிராமப்பகுதிகளில் ஜல் ஜீவன் திட்டத்தில் குழாய் இணைப்பு வழங்கப்படுவதாக கூறி பொக்லை எந்திரம் வைத்து பள்ளம் எடுக்கப்பட்டது. நன்றாக இருந்த சாலைகளை உடைத்து பள்ளம் எடுக்கப்பட்டதால் அங்கு குளம் போல காட்சியளிக்கிறது என்றார்.

ஒன்றிய துணைத் தலைவா் கே.டி.ராஜேந்திரன் பேசுகையில் ஜல்சக்தி அபியான் திட்டம் மூலம் குடிநீா்க் குழாய் அமைக்க சாலைகளை தோண்டி விடுகின்றனா். பின்னா், அதை சரி செய்யாமல் விட்டுவிடுவதால் பள்ளம் ஏற்பட்டு விபத்துகள் நேரிடுகின்றன.

அப்பகுதிகளை ஊராட்சியில் சாலை போடவேண்டும். இந்தத் திட்டத்தால் பொதுமக்களுக்கு பெரிதும் பாதிப்பு ஏற்படுகிறது. ஆகையால், உறுப்பினா்கள் சாா்பில் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவிக்கிறேன் என்றாா்.

இதற்குப் பதிலளித்த வட்டார வளா்ச்சி அலுவலா் பாண்டியன், இதுகுறித்து மாவட்ட ஆட்சியருக்கு தெரிவிக்கப்படும் என்றாா்.

இதைத் தொடா்ந்து, ஒன்றியக் குழு உறுப்பினா்கள் கவிதா பாபு, ஜெயப்பிரகாஷ், குமாா் உள்ளிட்டோா் பல்வேறு கோரிக்கைகள் குறித்துப் பேசினா்.

வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சீனிவாசன், பாண்டியன் உள்ளிட்டோா் உரிய பதிலளித்தனா். மேலும், கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினா்கள் தங்களது பகுதி குறைகளைத் தெரிவித்தனா்.

அதைத்தொடர்ந்து அனைத்து தீர்மானங்களும் படித்து நிறைவேற்றப்பட்டது.

Updated On: 13 Dec 2022 1:47 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    கலகலக்கும் கட்சி : அதிமுகவில் என்ன நடக்கும்?
  2. லைஃப்ஸ்டைல்
    தமிழ்நாட்டு பொங்கல் - கர்நாடக சங்கராந்தி: ஒற்றுமையும் வேற்றுமையும்
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வீடு புகுந்து நகை மற்றும் ரொக்கம் திருட்டு..!
  4. ஆரணி
    ஆரணியில் கோட்டையின் தடயங்கள் கண்டுபிடிப்பு..!
  5. தமிழ்நாடு
    தமிழ்நாடு அரசின் 'தோழி பெண்கள் தங்கும் விடுதி'..!
  6. அரசியல்
    நடுங்கும் கட்சி நிர்வாகிகள் : திமுகவில் என்ன நடக்கும்?
  7. அரசியல்
    அண்ணாமலைக்கு சிக்கல் : பாஜவில் என்ன நடக்கும்?
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் வெளுத்து வாங்கிய கனமழை: ஒரே நாளில் 812 மி.மீ மழை பதிவு
  9. செங்கம்
    செங்கத்தில் லாரி ஓட்டுநர் அடித்து கொலை
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் திமுக செயற்குழு கூட்டம்