/* */

பூனை பிடிப்பதாகக் கூறி நகை திருடிய 2 பெண்கள்

கண்ணமங்கலம் அருகே பூனை பிடிப்பதாகக்கூறி நகை திருடிய 2 பெண்கள் உள்பட 5 பேருக்கு தலா ஒரு ஆண்டு ஜெயில்

HIGHLIGHTS

பூனை பிடிப்பதாகக் கூறி நகை திருடிய 2 பெண்கள்
X

கண்ணமங்கலம் அருகே உள்ள கல்பட்டு கிராமத்தில் கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10-ந் தேதி சங்கர் என்பவர் வீட்டுக்குள் பூனை பிடிப்பதாக கூறி ஆந்திராவைச் சேர்ந்த இரண்டு பெண்கள் உள்பட 5 பேர் கொண்ட கும்பல் புகுந்து 9 பவுன் நகையை திருடிச்சென்றுவிட்டனர்.

இது குறித்த புகாரின்பேரில் அப்போதைய கண்ணமங்கலம் போலீஸ் இ்ன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

பின்னர் இந்த திருட்டு வழக்கில் ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டத்தில் உள்ள தெனாலி எட்டலலிங்கா காலனியை சேர்ந்த ராணி (வயது 40), ராமலம்மாள் (55), ராமு (40), வெங்கட்ராமன் (60), ரத்தினகிரியை சேர்ந்த முரளி (41) ஆகிய 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் ஆரணி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது. மாஜிஸ்திரேட்டு சதீஷ்குமார் வழக்கை விசாரித்து 5 பேருக்கும் தலா ஒரு வருடம் ஜெயில்தண்டனையும், தலா ரூ.1000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

Updated On: 20 Dec 2021 5:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க