/* */

100 நாள் வேலைத்திட்டத்தில் நேரத்தை மாற்றுவதா? கிராம மக்கள் சாலை மறியல்

காட்டுகாநல்லூர் கிராமத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் நேரத்தை மாற்றுவதை கண்டித்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

100 நாள் வேலைத்திட்டத்தில் நேரத்தை மாற்றுவதா? கிராம மக்கள் சாலை மறியல்
X

100 நாள் வேலை திட்டத்தில் நேரத்தை மாற்றுவதை கண்டித்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

நாடு முழுவதும் 100 நாள் வேலை திட்டத்தின்கீழ் ஊரக பகுதிகளில் பல்வேறு பணிகள் நடக்கின்றன. இந்த பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள் காலை 9 மணிக்கு வந்து மதியம் 3 மணிக்கு பின் வீடு திரும்புவதாக இருந்தது.

ஆனால் இப்போது 2 மணி நேரத்துக்கு முன்னதாகவே அதாவது காலை 7 மணிக்கே பணியில் ஆஜராக வேண்டும் என கூறப்படுகிறது. பெண் தொழிலாளர்கள் வீட்டு வேலையை முடித்துவிட்டு வருவதற்குள் நேரம் கடந்து விடுவதால் வருகைப் பதிவேட்டில் பெயர் பதிவு இயலவில்லை.

இந்த நிலையில் நேரம் மாற்றம் செய்யப்பட்டதை கண்டித்தும் முன்பு போலவே காலை 9 மணிக்கு துவங்க அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி திருவண்ணாமலை கண்ணமங்கலம் அருகே உள்ள காட்டுக்காநல்லூரில் தொழிலாளர்கள் திடீர் மறியலில் ஈடுபட்டு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர்.

போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலமோன் ராஜா, சப் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் சமரசம் செய்தனர். இதனால் போராட்டத்தை தொழிலாளர்கள் கைவிட்டு கலைந்து சென்றனர்.

Updated On: 2 March 2022 5:24 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    என்னோட இரண்டாவது படம் ஆதி கூட கொஞ்சும் தமிழில் பேசிய Heroine...
  2. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்
  3. வீடியோ
    பெத்தப் பிள்ளைய பாதுகாக்க வக்கில்ல ! #veeralakshmi #savukkushankar...
  4. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  5. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை வானில் பறக்க காத்திருக்கும் ஜோடிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    நாங்கள் காத்துகொண்டு இருக்கிறோம் ! #annamalai #annamalaibjp ...
  7. லைஃப்ஸ்டைல்
    அன்பும், இன்பமும் நிறைந்த இல்லற வாழ்வுக்கான நல்வாழ்த்துக்கள்
  8. பொன்னேரி
    சோழவரம் அருகே லாரி மீது தனியார் கல்லூரி பேருந்து மோதி விபத்து
  9. லைஃப்ஸ்டைல்
    அன்பு தேசத்து இளவரசிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  10. கும்மிடிப்பூண்டி
    கும்மிடிப்பூண்டி: இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ.2 லட்சம்