/* */

ஆரணியில் 100 நாள் வேலை திட்டத்தில் மோசடி நடந்ததாக புகார்

ஆரணியில் 100 நாள் வேலை திட்டத்தில் மோசடி நடந்ததாக கூறி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

HIGHLIGHTS

ஆரணியில் 100 நாள் வேலை திட்டத்தில் மோசடி நடந்ததாக புகார்
X

ஆரணி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பொதுமக்கள் புகார் மனு அளித்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே சங்கீதவாடி கிராமத்தில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

ஊராட்சி செயலாளராக சுபா பணிதள பொறுப் பாளராக சீதா பணிபுரிந்து வருகின்றனர். இந்த கிராமத்தில் 600 பேர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சி திட்டத்தின் கீழ் 100 நாள் வேலையில் 2 பிரிவுகளாக பணிபுரிந்து வருகின்றனர்.

மேலும் கடந்த 2 நாட்களாக பணிதள பொறுப்பாளர் சீதா 600நபர்களிடம் கட்டாயமாக 100ரூபாய் அலுவலகத்திற்கு தர வேண்டும் மறுக்கும் நபர்களுக்கு வேலை வழங்க முடியாது என்று வட்டார திட்ட அலுவலர் சீனிவாசன் தெரிவித்துள்ளதாக கூறி சுமார் 450க்கும் மேற்பட்டவர்களிடம் தலா 100 ரூபாய் வசூலித்ததாக கூறப்படுகிறது.

இது சம்பந்தமாக 6வது வார்டு உறுப்பினர் உமா ரங்கநாதன் என்பவர் சம்பவம் குறித்து கேட்டதற்கு ஊராட்சி செயலர் மற்றும் பணிதள பொறுப்பாளர் ஆகியோர் சரிவர பதிலளிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த வார்டு உறுப்பினர் மற்றும் 100 நாள் பணியாளர்கள் 20-க்கும் மேற்பட்டோர் ஆரணி ஓன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு வட்டார திட்ட வளர்ச்சி அலுவலர் சீனிவாசனிடம் புகார் மனு அளித்தனர்.

புகாரை பெற்று கொண்ட வட்டார வளர்ச்சி திட்ட அலுவலர் சீனிவாசன் விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினார். உரிய நடவடிக்கை மேற் கொள்ள வில்லையென்றால் கலெக்டரிடம் புகார் அளிப்பதாக 100 நாள் பணியாளர்கள் தெரிவித்தனர்.

Updated On: 1 March 2022 1:48 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    10 பெண்புலிக்கு நடுவில் ஒரு நரி Veeralakshmi பகீர் !#police...
  2. வீடியோ
    🤣எந்த நேரத்துல எந்த Stunt அடிக்கிறதுனு தெரியல😂!#annamalai...
  3. லைஃப்ஸ்டைல்
    பொங்கல் பொன்னாளில் வாழ்த்து சொல்வோமா..?
  4. வீடியோ
    என்னோட இரண்டாவது படம் ஆதி கூட கொஞ்சும் தமிழில் பேசிய Heroine...
  5. திருத்தணி
    திருத்தணி முருகன் கோவில் உண்டியல் திறப்பு:கிடைத்த காணிக்கை ரூ.1 கோடி
  6. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்
  7. வீடியோ
    பெத்தப் பிள்ளைய பாதுகாக்க வக்கில்ல ! #veeralakshmi #savukkushankar...
  8. கோவை மாநகர்
    கோவை அருகே நச்சுப் புகையை வெளியேற்றிய தார் தொழிற்சாலை செயல்பட தடை
  9. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  10. கோவை மாநகர்
    கோவை சிறையில், சவுக்கு சங்கரை பேட்டி எடுத்த யூடியூபர் பெலிக்ஸ்...