ஆர்.கே.பேட்டையில் பா.ஜ.க வில் இணைந்த இளைஞர்கள், பெண்கள்

திருவள்ளூர் மேற்கு மாவட்டம் ஆர்.கே.பேட்டை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பெண்கள் பா.ஜ.க வில் இணைந்தனர். அனைவரையும் மாவட்ட தலைவர் அஸ்வின்குமார் வரவேற்றார்.
திருவள்ளூர் மேற்கு மாவட்டம் ஆர்.கே.பேட்டை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பெண்கள் பா.ஜ.க வில் இணைந்தனர். அவர்களை மாவட்ட தலைவர் அஸ்வின்குமார் வரவேற்றார்.
ஆர்.கே.பேட்டை சேர்ந்த ஏராளமான இளைஞர்கள், பெண்கள், பொதுமக்கள் தங்களை பா.ஜ.க.வில் இணைத்துக் கொள்ள ஆர்வம் காட்டினர். மகளிரணி நிர்வாகி பவித்ரா சரவணன் ஏற்பாட்டில் ஆர்.கே.பேட்டையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் ஆர்.கே.பேட்டை சுரேஷ் தலைமை வகித்தார்.
திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் அஸ்வின் குமார், மாநில ஓ.பி.சி. அணி செயலாளர் ராஜ்குமார் ஆகியோர் பங்கேற்று புதிய உறுப்பினர்களை வரவேற்றனர். முன்னதாக ஆர்.கே.பேட்டைக்கு வருகை தந்த பா.ஜ.க பிரமுகர்களுக்கு நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு வழங்கினர். இந் நிகழ்ச்சியில் மாநில மகளிரணி பொருலாளர் மாலினி ஜெயச்சந்திரன்,மாவட்ட பொதுச் செயலாளர் கருணாகரன், நிர்வாகிகள் ரமேஷ், வாசுகி, குப்பன், பாலாஜி, பெருமாள்,துரைராஜ், சச்சின்,பவித்ரா சரவணன், வினோத், தாமோதரன், குமார்,பாண்டியன், சண்முகம், எழிலரசன், மணி,முரளி உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu