/* */

திருத்தணி: பெண்ணின் வயிற்றில் கத்தரிகோல்; மனித உரிமை ஆணையம் அதிரடி உத்தரவு!

திருத்தணி அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்கு சேர்ந்த பெண்ணின் வயிற்றில் கத்தரிக்கோல் வைத்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டது தொடர்பாக மனித உரிமை ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

HIGHLIGHTS

திருத்தணி: பெண்ணின் வயிற்றில் கத்தரிகோல்; மனித உரிமை ஆணையம் அதிரடி உத்தரவு!
X

வயிற்றில் கத்தரிகோல் வைத்து அறுவை செய்யப்பட்ட பெண்.

அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர்கள் அவ்வபோது கத்தரிக்கோலை வயிற்றின் உள்ளே வைத்து அறுவை சிகிச்சை செய்து முடித்து விடும் சம்பவம் உலகம் முழுவதும் ஆங்காங்கே நடைபெற்று வருவது தெரிந்தது. அந்த வகையில் தற்போது தமிழகத்தில் திருவள்ளுர் மாவட்டம் திருத்தணியில் நடந்துள்ளது. பிரசவத்திற்காக வந்த பெண்ணிற்கு அறுவை சிகிச்சை செய்யும் பொழுது கத்திரிக்கோலை உள்ளே வைத்து தைத்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருத்தணி அரசு மருத்துவமனைக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் கர்ப்பிணி ஒருவர் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்த மருத்துவர்கள் அந்த பெண்ணின் வயிற்றில் கத்திரிகோலை வைத்து தைத்துள்ளார். அந்த பெண்ணுக்கு வயிற்றில் அடிக்கடி வலி எடுத்ததால் இதுபற்றி பரிசோதனை செய்து பார்த்தபோது இந்த விவகாரம் வெளி உலகிற்கு தெரியவந்தது.

மருத்துவர்களின் ரிப்போர்ட்.

தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் இந்த விவகாரத்தில் தலையிட்டு புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில், திருத்தணி அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்கு சேர்ந்த பெண்ணின் வயிற்றில் கத்திரிக்கோல் வைத்து தைத்த விவகாரத்தில் 4 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மருத்துவம் மற்றும் ஊரக சுகாதாரத் துறை பணிகள் துறை இயக்குனர் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவு புதுப்பித்துள்ளது.

Updated On: 9 Jun 2021 11:34 AM GMT

Related News

Latest News

  1. க்ரைம்
    பொன்னேரி அருகே வீட்டின் முன் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்...
  2. ஆன்மீகம்
    மர்ம நிழல்! விஞ்ஞானம் தோற்றது எப்படி? மெய்ஞானத்தால் அறிவியல் வளர்த்த...
  3. இந்தியா
    இந்தியாவின் சூப்பர்சானிக் டர்பீடோக்கள்..! கதறும் சீனா, அலறும்...
  4. சினிமா
    பாடல்களுக்கு ராயல்டி! பணத்தாசை பிடித்தவரா இளையராஜா?
  5. தமிழ்நாடு
    சவுக்கு சங்கர் கைது : மக்கள் என்ன சொல்றாங்க தெரியுமா..?
  6. தமிழ்நாடு
    வறட்சியின் பாதிப்பு :உயிரிழக்கும் கால்நடைகள்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வாங்க டீ சாப்பிடலாம்..! அன்பின் உபசரிப்பு..!
  8. நாமக்கல்
    களங்காணி அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள்; 25 ஆண்டுக்கு பின்...
  9. மயிலாடுதுறை
    என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி..!
  10. நாமக்கல்
    ப.வேலூரில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு: முன்னாள் அமைச்சர்...