/* */

மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய மூன்று பேரை கைது செய்த போலீசார்

சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்தி வந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய மூன்று பேரை  கைது செய்த போலீசார்
X

பைல் படம்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள கனகம்மாசத்திரம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இத்தகவலின் பேரில் கனகம்மாசத்திரம் போலீசார், சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அவ்வழியாக வந்த பல்வேறு வாகனங்களை மடக்கி சோதனை செய்தனர். அப்போது சந்தேகக்கிடமாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று நிறுத்தி சோதனை செய்ததில், கனகம்மாசத்திரத்தை சேர்ந்த அருண்(23), சுனில் குமார்(20) மற்றும் சஞ்சய்(20) ஆகிய மூன்று பேர் கஞ்சா கடத்தி வருவது தெரிந்தது.

இதையடுத்து அவர்கள் மூன்று பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த 500 கிராம் கஞ்சா மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்தனர்.

Updated On: 6 Aug 2022 3:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  2. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  4. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  5. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  6. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  7. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  8. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  9. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு
  10. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!