திருத்தணி அருகே மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர் உயிரிழப்பு

திருத்தணி அருகே தொடர் காய்ச்சல் காரணமாக சிகிச்சை பலனின்றி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
திருத்தணி அருகே மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர் உயிரிழப்பு
X

மர்ம காய்ச்சலுக்கு பலியான பூபாலன்.

திருத்தணி அருகே தொடர் காய்ச்சல் காரணமாக வாலிபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவலாக உள்ளது. சில மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும் மர்ம காய்ச்சல் இருப்பதால் சுகாதாரத் துறை சார்பில் காய்ச்சல் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. ஆனாலும் காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு தான் இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஒன்றியம், அரும்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட தன்ராஜ் கண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் பாலாஜி (எ) பூபாலன் . இவர் பெயிண்டர் வேலை செய்து வந்தார் . கடந்த சில நாட்களாக பூபாலனுக்கு தொடர்ந்து காய்ச்சல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

பூபாலனுக்கு காய்ச்சல் அதிகமானதால் அவரது உறவினர்கள் திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். நேற்று காலையில் திடீரென்று காய்ச்சல் மேலும் அதிகமாகி, வலிப்பு நோய் ஏற்பட்டது. உடனே அவரை மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பூபாலன் பரிதாபமாக உயிரிழந்தார்.

கடந்த சில நாட்களாகவே தன்ராஜ் கண்டிகை கிராம மக்களுக்கு காய்ச்சல் பரவி வருகிறது. போதுமான சிகிச்சை மேற்கொள்ளப்படாததால், காய்ச்சல் பாதித்தவர்களின் எண்ணிக்கை, அதிகரித்து வருகிறது. இதுகுறித்து சுகாதாரத்துறையினருக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். காய்ச்சலுக்கு உயிரிழந்த பூபாலன் குடும்ப சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காய்ச்சலால் வாலிபர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 26 Sep 2023 9:55 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    Rajju Porutham Meaning திருமணப் பொருத்தத்தில் முக்கிய பங்கு...
  2. சேலம்
    சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் நோபல் பரிசு பெற்ற புத்தங்கள்: ஆட்சியர்...
  3. தமிழ்நாடு
    டெல்டா மாவட்டங்களில் மிக்ஜம் புயலால் முடங்கிய மீன்பிடி தொழில்
  4. திருமங்கலம்
    மதுரையில் அர்ஜுன் சம்பத் கைது செய்யப்பட்டதால் பரபரப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    New Year Wishes In Tamil 2024 புத்துணர்ச்சியைத் தரும் புத்தாண்டே ...
  6. சேலம்
    சேலத்திலிருந்து சென்னைக்கு அனுப்பப்படும் புயல் நிவாரணப் பொருட்கள்
  7. சினிமா
    பாட்டு இல்லாத படம் குற்றவாளி! அமீரின் முதல் படம் இதுதான்...!
  8. தமிழ்நாடு
    வெள்ளப்பாதிப்புகளை பார்வையிட வருகிறார் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்
  9. சிவகாசி
    சிவகாசியில் ஆதரவற்றோர் பள்ளியில் ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிப்பு
  10. சினிமா
    சென்னையில் வெள்ளத்தில் சிக்கிய நடிகை நமீதா பத்திரமாக மீட்பு