/* */

பள்ளிப்பட்டு அருகே முதல் முறையாக கிராமத்திற்கு போக்குவரத்து சேவை தொடக்கம்‌

பள்ளிப்பட்டு அருகே ஆந்திர எல்லைப் பகுதியில் அமைந்துள்ள கிராமத்திற்கு முதல் முறையாக போக்குவரத்து சேவையை எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

HIGHLIGHTS

பள்ளிப்பட்டு அருகே  முதல் முறையாக கிராமத்திற்கு போக்குவரத்து சேவை தொடக்கம்‌
X

கிராமத்திற்கு பேருந்து சேவையை தொடங்கி வைத்த எம்எல்ஏ சந்திரன் 

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே ஆந்திர எல்லைப் பகுதியில் அமைந்துள்ள வெங்கல்ராஜ்குப்பம், திருமல்ராஜ்பேட்டை, படுதளம், அருந்ததி காலனி, சுற்றுவட்டார கிராமங்களுக்கு போக்குவரத்து வசதிக்காக கிராம மக்கள் பல ஆண்டுகளாக எதிர்பார்த்து காத்திருந்தனர்.

சுமார் மூன்று கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று பிரதான சாலைக்கு பயணிக்க வேண்டிய நிலையில் பள்ளி கல்லூரி மாணவர்கள், பெண்கள், முதியோர் உட்பட கிராம மக்கள் அவதிப்பட்டு வந்தனர். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளராக போட்டியிட்ட எஸ்.சந்திரன் கிராம மக்களுக்கு உறுதி கூறினார்.

அதன்படி, வெங்கல்ராஜ்குப்பம் முதல் திருத்தணிக்கு அரசு பேருந்து சேவையை எம்.எல்.ஏ‌ சந்திரன் தொடங்கி வைத்தார். முதல் முறையாக கிராமத்திற்கு போக்குவரத்து சேவை தொடங்கப்பட்டுள்ளதால், கிராம மக்கள் ஒட்டு மொத்தமாக திரண்டு வந்து பேருந்துக்கு பூஜை செய்து மலர்கள் தூவி உற்சாகமாக வரவேற்றனர்.

இதனையடுத்து வெங்கட்ராஜ்குப்பத்திலிருந்து தனது முதல் பயணத்தை தொடங்கிய அரசு பேருந்தில் சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட திமுக பொறுப்பாளர் உட்பட கிராம மக்கள் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மகிழ்ச்சியோடு அரசு பேருந்தில் அமர்ந்து பயணத்தை தொடங்கினர்.

பல ஆண்டுகள் காத்திருப்பு நிறைவேற்றி வைத்த சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தமிழக அரசுக்கு கிராம மக்கள் தங்களது நன்றியை தெரிவித்துக் கொண்டனர்‌.




Updated On: 4 Jan 2022 5:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  2. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  3. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  4. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  5. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  6. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  7. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  8. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  9. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  10. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்