/* */

திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர் கனமழை; நீரில் மூழ்கிய பாலங்கள்

கிருஷ்ணாபுரம் அணையில் இருந்து நீர் திறப்பால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

HIGHLIGHTS

திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர் கனமழை; நீரில் மூழ்கிய பாலங்கள்
X

கிருஷ்ணாபுரம் அணை.

திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. பள்ளிப்பட்டு அருகே ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழைக்கு அம்மா பள்ளியில் உள்ள கிருஷ்ணாபுரம் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

இதைத்தொடர்ந்து நேற்று இரவு முதல் வினாடிக்கு 500 கனஅடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் மலைப்பகுதிகளில் இருந்து அதிக அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

இதனால் திருவள்ளூர் மாவட்டத்தில் பெரும்பாலான ஏரி, குளங்கள் நிரம்பத் தொடங்கியுள்ளது. குறிப்பாக திருத்தணி, பள்ளிப்பட்டு பகுதிகளில் உள்ள பொதுப்பணித் துறை ஊரக வளர்ச்சித் துறைக்கு சொந்தமான 50க்கும் மேற்பட்ட ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

நீர்வரத்து அதிகமானதால் சொரக்காபேட்டையில் இருந்து வெளியூர் செல்லும் தரைப்பாலம், சமந்த வாடா தலைபாரம் ஆகியவைகள் நீரில் மூழ்கியது. கொசஸ்தலை ஆற்றில் வந்துகொண்டிருக்கும் நீரானது நாளை பூண்டி நீர்த் தேக்கத்தை சென்றடையும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 26 Aug 2021 12:12 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?