/* */

சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் கிராம மக்கள் சாலை மறியல்

சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர், இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

HIGHLIGHTS

சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் கிராம மக்கள் சாலை மறியல்
X

சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே பொன்பாடி காலனியை சேர்ந்த இந்திராணி என்ற மூதாட்டி இன்று காலை கிராமத்திற்கு அருகில் சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் கடக்க முயன்றபோது திருப்பத்தூரில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி சென்ற டெம்போ ட்ராவல் வேன் மோதியது.

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். இதனால் ஆத்திரமடைந்த மூதாட்டியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோருக்கு இறந்த மூதாட்டியின் சடலத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் சென்னை திருப்பதி தேசிய கொல்கத்தா நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு திருத்தணி போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர் 1 மணி நேர போராட்டம் நீடித்ததால், 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து முடங்கியது.

இருப்பினும் சாலைமறியலை கைவிட கிராமமக்கள் முன்வராததால் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. பல கட்ட பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு இறந்த மூதாட்டியின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்து, மறியலில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.

Updated On: 14 July 2021 2:33 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  2. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  5. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  6. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  10. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்