/* */

திருத்தணி முருகன் கோவிலில் சித்திரை பெருவிழா தேரோட்டம்

திருத்தணி முருகன் கோவிலில் சித்திரை பெருவிழா தேரோட்டத்தில் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.

HIGHLIGHTS

திருத்தணி முருகன் கோவிலில் சித்திரை பெருவிழா தேரோட்டம்
X

திருத்தணி முருகன் கோவிலில் சித்திரை பெருவிழா தேரோட்டம் நடைபெற்றது.

திருத்தணி முருகன் கோவிலில் திருத்தேர் விழா விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தேரின் வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோவில் உலக பிரசித்தி பெற்ற திருக்கோவிலாகும் இக்கோவில் முருகப்பெருமானின் ஐந்தாம் படை வீடாகும்.இந்த திருக்கோயிலில் சித்திரை மாத பிரம்மோற்சவ நிகழ்வு வெகு விமரிசையாக பெருவிழா நடைபெற்று வருகிறது.


இந்த நிகழ்வில் முக்கிய நிகழ்வாக திருத்தேரோட்டம் நிகழ்வு நேற்று நடைபெற்றது. மலைக்கோயில் அலங்கரிக்கப்பட்ட மரத்தேரில் உற்சவர் முருகப்பெருமான் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார் முன்னதாக உச்சவருக்கு பால்,தயிர்,சந்தனம், இளநீர், ஜவ்வாது, தேன், பன்னீர், திருநீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வண்ண மலர்களாலும், திரு ஆபரணங்களால் இதனைத் தொடர்ந்து மகா தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.


பல்வேறு ஊர்களில் இருந்து வந்திருந்த திரளான பக்தர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டு திருத்தேரினை வடம் பிடித்து இழுத்து திருக்கோவில் மாடவீதி வீதியை உலா வந்து பக்தர்களுக்கு முருகப்பெருமான் அருள் பாலித்தார். மங்கள இசை வாத்தியங்கள் கைலாய வாத்தியங்கள் முழங்க திருத்தேர் உலா நடைபெற்றது. மற்றும் பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது. ஆலயத்தின் சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Updated On: 21 April 2024 8:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  3. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  4. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  5. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  6. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  7. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  8. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு
  9. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!
  10. திருப்பரங்குன்றம்
    கூடலழகர் பெருமாள் கோயில், வைகாசிப் பெருந் திருவிழா!