திருத்தணி அருகே கத்தியை காட்டிமிரட்டி பணம் செல்போன் பறிப்பு

X
By - Saikiran, Reporter |29 April 2021 11:22 PM IST
திருத்தணி அடுத்த மாம்பாக்கம் சத்திரம் கிராமத்தில் பேருந்துக்காக காத்திருந்தவரிடம் கத்தியை காட்டி மிரட்டி, செல்போன் மற்றும் பணம் பறித்து மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் ஹரி (34). இவர் கடந்த 28.4.2021 அன்று காலை 8 மணி அளவில் மாம்பாக்கம் சத்திரம் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்தார்.
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 2 நபர்கள், பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்த ஹரியிடம் கத்தியை காட்டி மிரட்டி, பாக்கெட்டில் இருந்த பணம் 1500 மற்றும் செல்போனை பிடுங்கிக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இதுகுறித்து ஹரி திருத்தணி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu